Don't Miss!
- Finance நரேந்திர மோடி ஆட்சி மீண்டும் பிடித்தால்.. முதல் வேலையாக 3 அரசு நிறுவன பங்குகளை விற்பது தான்..!
- News ‛‛திமுக கண்ணில் வந்த தோல்வி பயம்’’.. வாக்காளர்கள் பெயர்களை நீக்கியது ஏன்? எல் முருகன் விமர்சனம்
- Technology 75 நாளுக்கு ஒரே ரீசார்ஜ்.. தினசரி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மை.. ரூ.500 விலைக்குள் எந்த திட்டம்?
- Sports வன்மத்தை கக்கிட்டாரு.. தோனியை வம்புக்கு இழுத்த கவுதம் கம்பீர்.. கொந்தளிக்கும் சிஎஸ்கே ரசிகர்கள்!
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
நடிகர் சங்க கட்டடம்.... 2 வாரங்களுக்கு இடைக்காலத் தடை
சென்னை: நடிகர் சங்க கட்டட கட்டுமானப் பணிகளைச் தொடர மேலும் இரு வாரங்களுக்கு தடையை நீட்டித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
ரூ 26 கோடி ரூபாயில் நடிகர் சங்கக் கட்டடம் கட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்தக் கட்டடத்துக்கு நடிகர்கள் ரஜினி, கமல் ஆகிய இருவரும் சேர்ந்து அடிக்கல் நாட்டினர்.
இதனிடையே, வித்யோதயா காலனியைச் சேர்ந்த கே.எம் ஶ்ரீரங்கன் மற்றும் அண்ணாமலை ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அதில், 33 அடி பொது சாலையை ஆக்கிரமித்து நடிகர் சங்கம் கட்டடம் கட்டுவதாகக் கூறப்பட்டிருந்தது. தியாகராய நகரில் ஹபிபுல்லா, பிராகாசம் தெருவை இணைக்கும் பகுதியில் இந்த ஆக்கிரமிப்பு உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இதனால் அப்பகுதி மக்கள் வேறு சாலையைப் பயன்படுத்தி செல்ல வேண்டிய நிலைமை ஏற்பட்டிருப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து, நடிகர் சங்கம் கட்டடம் கட்டும் பணிகளுக்கு நீதிமன்றம் தடை விதித்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கட்டட பணிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.