Don't Miss!
- Finance இனி சுங்கச் சாவடிகளில் நிற்க வேண்டியதில்லை! வருகிறது ஜிபிஎஸ் தொழில்நுட்பம்..!
- Automobiles கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- Sports வீடியோ- கட்டி பிடிக்க வந்த மலிங்கா.. தள்ளி விட்ட ஹர்திக் பாண்டியா..மும்பை அணியில் என்ன தான் நடக்குது
- News "மத்திய அரசை விமர்சிக்காதது ஏன்?" இரண்டு நொடி கேப் விட்டு.. எடப்பாடி பழனிசாமி தந்த விளக்கம்
- Technology ஏர்டெல் காலி.. மாதாந்திரம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. 5ஜி டேட்டா.. அன்லிமிட் வாய்ஸ் கால்கள்!
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
கபாலி பாடல் வரிகளை நீக்க வேண்டுமா? - உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு
மதுரை: கபாலி படத்தின் பாடல் ஒன்றின் வரிகளை நீக்குவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரை திருநகரை சேர்ந்த ஒருவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், "நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளியாகியுள்ள கபாலி படத்தில் கபிலன் எழுதிய 'உலகம் ஒருவனுக்கா...' என்று தொடங்கும் பாடலின் இடையே வரும் சில வரிகள் சாதி ரீதியாகவும், குறிப்பிட்ட சிலரை புண்படுத்தும் வகையிலும் எழுதப்பட்டுள்ளன.
இதுபற்றி சமூக வலைதளங்களில் கருத்து மோதல்கள், தேவையற்ற விவாதங்கள் நடந்து வருவதுடன் வதந்திகளையும் பரப்புகிறார்கள்.
எனவே சர்ச்சைக்குரிய அந்த வரிகளை நீக்க வேண்டும், என்று திருநகர் போலீசில் புகார் மனு கொடுத்தேன். ஆனால் எனது மனு மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் கோர்ட்டு தலையிட்டு, கபாலி படத்தின் பாடலில் இடம் பெற்றுள்ள சர்ச்சை வரிகளை நீக்கும்படி உத்தரவிட வேண்டும்," என்று கோரியிருந்தார்.
'கலகம் செய்து ஆண்டையரின் கதை முடிப்பான்' என்ற வரியை நீக்க வேண்டும் என்பது இந்த நபரின் கோரிக்கை.
இந்த மனு நேற்று நீதிபதி கல்யாணசுந்தரம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் போலீசார் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று நீதிபதி உத்தரவிட்டார்.