Don't Miss!
- News இத்தனை நாளா எங்க போனீங்க? ஓட்டுக்கேட்க போன ஜோதிமணிக்கு கரூரில் எதிர்ப்பு! சமாளித்த திமுக
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Automobiles தேர்தல் வர நேரத்துல பிரம்மாஸ்திரத்தை கையில எடுத்துட்டாங்க! சுங்கசாவடிகளை தூக்க முடிவு பண்ணிட்டாங்க!
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
நந்தினி கதைத் திருட்டு வழக்கு: சுந்தர் சியிடம் விசாரணை நடத்த போலீசுக்கு உத்தரவு
சென்னை: நந்தின் சீரியலின் கதைத் திருட்டு தொடர்பாக இயக்குநர் - நடிகர் வேல்முருகன் தொடர்ந்த வழக்கில், இயக்குநர் சுந்தர் சியிடம் விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மெகா தொடர் நந்தினி. இந்தத் தொடரை இயக்குநர் சுந்தர் சி தயாரித்துள்ளார். இந்தத் தொடரின் கதை தன்னுடையது என உரிமை கொண்டாடியுள்ள இயக்குநரும் நடிகருமான வேல்முருகன், அதற்கு ஈடாக ரூ 50 லட்சம் கேட்டிருந்தார்.
இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் சுந்தர் சிக்கு எதிராக கிரிமினல் வழக்கும் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி எம்எஸ் ரமேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக இயக்குநர் சுந்தர் சியிடம் போலீசார் விசாரணை நடத்தி, குற்றச்சாட்டில் உண்மையிருந்தால் அவர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யுமாறு சென்னை மாநகர கமிஷனருக்கு உத்தரவிட்டுள்ளார்.