Don't Miss!
- Sports IPL 2024 :"போர் வீரன்" ஆட்டத்தால் தோல்வியடைந்த சிஎஸ்கே.. கடைசி 5 ஓவரில் நடந்த மேஜிக்.. லக்னோ வெற்றி
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Automobiles இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நந்தினி கதைத் திருட்டு வழக்கு: சுந்தர் சியிடம் விசாரணை நடத்த போலீசுக்கு உத்தரவு
சென்னை: நந்தின் சீரியலின் கதைத் திருட்டு தொடர்பாக இயக்குநர் - நடிகர் வேல்முருகன் தொடர்ந்த வழக்கில், இயக்குநர் சுந்தர் சியிடம் விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மெகா தொடர் நந்தினி. இந்தத் தொடரை இயக்குநர் சுந்தர் சி தயாரித்துள்ளார். இந்தத் தொடரின் கதை தன்னுடையது என உரிமை கொண்டாடியுள்ள இயக்குநரும் நடிகருமான வேல்முருகன், அதற்கு ஈடாக ரூ 50 லட்சம் கேட்டிருந்தார்.
இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் சுந்தர் சிக்கு எதிராக கிரிமினல் வழக்கும் தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி எம்எஸ் ரமேஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக இயக்குநர் சுந்தர் சியிடம் போலீசார் விசாரணை நடத்தி, குற்றச்சாட்டில் உண்மையிருந்தால் அவர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யுமாறு சென்னை மாநகர கமிஷனருக்கு உத்தரவிட்டுள்ளார்.