Don't Miss!
- News லோக்சபா தேர்தலில் சொதப்பும் பாஜக? 5 நாளாக பிரசாரம் செய்யாத பிரதமர் மோடி.. என்ன காரணம்? பின்னணி
- Technology போட்டு தாக்கு.. அடுத்த 2 வாரத்துக்கு இதான் பெஸ்ட் பிளான்.. தினமும் 3GB Jio டேட்டா.. IPL பார்க்க இதுவே பெஸ்ட்!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
பீப் சிம்புவின் கோரிக்கை மனுவை நிராகரித்தது உயர் நீதிமன்றம்!
பீப்' பாடல் தொடர்பாக நடிகர் சிம்புவுக்கு எதிராக சென்னை போலீசில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மறுத்துவிட்டது.
'பீப்' பாடல் விவகாரத்தில் தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கத் தலைவர் பொன்னுசாமி அளித்த புகாரின்பேரில், இசையமைப்பாளர் அனிருத், நடிகர் சிம்பு மீது சென்னையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதில், கோவையில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் சிம்பு சார்பில் ஏற்கெனவே மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த மனு குறித்து போலீஸார் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
இந்த நிலையில், தனக்கு எதிராக சென்னையில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி சிம்பு மற்றொரு மனுவை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு, நீதிபதி சுப்பையா முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு வக்கீல் எஸ். சண்முக வேலாயுதம் ஆஜராகி, இந்த வழக்கு விசாரணைக்குத் தடை விதிக்க எதிர்ப்பு தெரிவித்தார்.
இதையடுத்து, இடைக்கால தடை விதிக்க மறுத்த நீதிபதி, சிம்புவின் மனு குறித்து பதிலளிக்குமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜனவரி 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.