Don't Miss!
- Finance கோடக் மஹிந்திரா பங்குகள் 10 சதவீதம் சரிவு.. முதலீட்டாளர்கள் பெரும் சோகம்.. டார்கெட் விலை குறைந்தது!!
- News மெடிக்கல் ஷாப் போறீங்களா? இருமல் மருந்து வாங்கணுமா? இந்த 67 மருந்துகளுக்கு தடை.. மத்திய அரசு அதிரடி
- Lifestyle இந்த 4 ராசி பெண்கள் காதலில் ரொம்ப அதிர்ஷ்டசாலிகளாம்... இவங்க காதல் வாழ்க்கை நினைச்சதை விட சூப்பரா இருக்குமாம்!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
'இரும்புத்திரை' படத்துக்கு எதிரான வழக்கு.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Recommended Video
சென்னை : விஷால் நடித்துள்ள 'இரும்புத்திரை' படத்தில் டிஜிட்டல் இந்தியா திட்டம் குறித்த தவறான கருத்துகள் இடம்பெற்றிருப்பதாகக் கூறி படத்திற்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
நாமக்கல்லைச் சேர்ந்த நடராஜன் என்பவர் 'இரும்புத்திரை' படத்துக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி படத்திற்கு தடை விதிக்கமுடியாது என உத்தரவிட்டுள்ளார்.
இரும்புத்திரை படத்தில், ஆதார் அடையாள அட்டைக்கு கொடுக்கப்படும் தகவல்கள் தவறாக பயன்படுத்தப்படுவதாக காட்சிகள் இடம்பெற்றுள்ளதாகவும், இந்தக் காட்சிகளுடன் படம் வெளியானால், ஆதார் குறித்து பொதுமக்களிடையே தேவையற்ற அச்சம் ஏற்படும் எனவே அந்தக் காட்சிகள் நீக்கப்படும் வரை படத்தை திரையிட தடை விதிக்க வேண்டும் என நடராஜன் மனு அளித்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, 'இரும்புத்திரை படம் குறிப்பிட்ட அந்தக் காட்சிகளுடன் சென்சார் போர்டில் சான்றிதழ் பெற்றுள்ளது. சென்சார் போர்டு அனுமதித்த நிலையில், படத்திற்கு தடை விதிக்க முடியாது' என உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து 'இரும்புத்திரை' படத்தின் இயக்குநர் பி.எஸ்.மித்ரன், "படத்தைப் பார்க்காமலேயே இவ்வாறு வழக்கு தொடுப்பது தேவையில்லாதது. படத்தைப் பார்க்காமலேயே எப்படி அதைப் பற்றி அறிய முடியும். குறிப்பிட்ட அந்தக் காட்சிகளை சென்சார் அனுமதித்துள்ளது. திட்டமிட்டபடி படம் வெளியாகும்" எனக் கூறியுள்ளார்.