Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
ரஜினி, ரஞ்சித்துக்கு ஐகோர்ட் நோட்டீஸ்.. 'காலா' படத்துக்கு தடை கோரிய வழக்கில் உத்தரவு!
Recommended Video
சென்னை : பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள 'காலா' திரைப்படத்துக்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், ரஜினிகாந்த், இயக்குநர் பா.ரஞ்சித், படத்தைத் தயாரித்த வுண்டர்பார் நிறுவனம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த ராஜசேகரன் சென்னை ஐகோர்ட்டில் 'காலா' படத்திற்கு தடை விதிக்கக் கோரி மனு தாக்கல் செய்தார். 1996-ம் ஆண்டு முதல் 2006-ம் ஆண்டு வரை தான் பதிவு செய்த 'கரிகாலன்' பட டைட்டிலை ஆண்டுதோறும் புதுப்பித்து வந்த தென்னிந்திய வர்த்தக சபை அதன்பிறகு அந்த டைட்டிலை புதுப்பிக்க மறுத்துவிட்டதாகத் தெரிவித்திருந்தார்.
தற்போது ரஜினி நடித்துள்ள படத்திற்கு 'கரிகாலன்' என்ற தனது தலைப்பைப் பயன்படுத்தி டைட்டில் உருவாக்கியுள்ளனர். எனவே, டைட்டிலை புதுப்பிப்பது தொடர்பான தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் விதிகளை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும், 'காலா' படத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியிருந்தார்.
இந்த வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது, "கரிகாலன் என்ற 'காலா' தலைப்பு தன்னுடையது என்று மனுதரார் கூறியதற்கு எந்த ஆதாரமும் இல்லை. எனவே படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது" எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து ராஜசேகரன் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு இன்று நீதிபதிகள் பார்த்திபன், ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரித்த நீதிபதிகள் 'காலா' படத்தை வெளியிட தடைவிதிக்க முடியாது என்று தெரிவித்தனர்.
மேலும், இந்த மனு குறித்து நடிகர் ரஜினிகாந்த், இயக்குநர் ரஞ்சித், படத்தைத் தயாரித்த வுண்டர்பார் நிறுவனம் மற்றும் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை ஆகியோர் வரும் ஜூன் மாதம் 14-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
உச்ச நட்சத்திரங்களின் படங்கள் வெளியாகும்போது இதுபோன்ற டைட்டில் பிரச்னைகள் விஸ்வரூபம் எடுப்பது வழக்கம் தான். இந்த வழக்குகள் தாண்டி 'காலா' திட்டமிட்டபடி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.