Don't Miss!
- News ரிமோட்டை எறிஞ்சு டிவியை உடைச்சு..சில்லறைய சிதற விட்டேனே! இப்போ..மநீமவில் இருந்து விலகிய முக்கிய புள்ளி
- Automobiles இப்ப மீட் பண்ணா தேர்தல்ல மோடி ஜெயிச்சிருவாரு! எலான் மஸ்க் - மோடி சந்திப்பு தள்ளி வைப்பு!
- Lifestyle 11 வயது சிறுமியை அம்மாவும்-மகனும் சேர்ந்து கடத்திய வினோதம்... எதுக்காக கடத்துனாங்க தெரியுமா?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
- Technology மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.12000 கட்.. அடிமட்ட ரேட்டில் ஃபிளிப் போன்.. 3D கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
கெத்து வரிவிலக்கு.... தனி நீதிபதி உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை
சென்னை: கெத்து படத்துக்கு வரி விலக்கு அளிக்க தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘கெத்து' திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியானது. இந்த படத்துக்கு வரி விலக்கு அளிக்க கோரி இந்த திரைப்படத்தை தயாரித்த ரெட் ஜெயின்ட் மூவி நிறுவனம் தமிழக அரசிடம் விண்ணப்பம் செய்தது.
இந்த மனுவை பரிசீலித்த தமிழக அரசு, ‘கெத்து' என்பது தமிழ் சொல் அல்ல. அதனால் வரி விலக்கு சலுகை வழங்க முடியாது என்று உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி துரைசாமி, 'கெத்து' என்பது தமிழ் சொல்தான். எனவே, வரிவிலக்கு அளிக்க மறுத்த தமிழக அரசு உத்தரவை ரத்து செய்கிறேன். இந்த திரைப்படத்துக்கு தமிழக அரசு வரி விலக்கு அளிக்கவேண்டும்,' என்று உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து வணிக வரித்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் ராமசுப்பிரமணியன், கிருபாகரன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமயாஜி ஆஜராகி வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதிகள், 'கெத்து' படத்துக்கு வரி விலக்கு அளிக்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதி துரைசாமி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர்.