Don't Miss!
- News ‛‛குழந்தைகளை தண்டிக்க கூடாது’’.. NCPCR ரூல்ஸ்ஸை அமல்படுத்த பள்ளி கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
அவருக்கு என் மீது சந்தேகமே வரவில்லை: கிருத்திகா உதயநிதி
Recommended Video
சென்னை: விஜய் ஆண்டனிக்கு தன் மீது சந்தேகமே வரவில்லை என்று இயக்குனர் கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
விஜய் ஆண்டனியை வைத்து காளி படத்தை இயக்கியுள்ளார் கிருத்திகா உதயநிதி ஸ்டாலின். வித்தியாசமான படங்களாக தேர்வு செய்யும் விஜய் ஆண்டனி கிருத்திகா படத்தில் நடித்துள்ளார் என்றால் அது நிச்சியமாக வித்தியாசமான கதையாகத் தான் இருக்க வேண்டும்.
இந்நிலையில் படம் குறித்து கிருத்திகா பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது,
காளி
வணக்கம் சென்னை படத்தை அடுத்து புது படத்தை துவங்குவது தான் பெரிய விஷயமாக இருந்தது. அந்த படத்திற்கு பிறகு பல கதைகள் எழுதினேன். இறுதியில் காளி கதையுடன் விஜய் ஆண்டனியை சந்தித்தேன்.
விஜய் ஆண்டனி
விஜய் ஆண்டனி வித்தியாசமான கதைகளில் நடித்து வருகிறார். அப்படி இருக்கும்போது அவருக்கு என் கதையை கேட்டதும் பிடித்துவிட்டது. நடிப்பதுடன் நானே தயாரிக்கவும் செய்வதாக கூறினார்.
கிருத்திகா
நானும், விஜய் ஆண்டனியும் தற்போது நண்பர்களாகிவிட்டோம். படம் சிறப்பாக வர அவர் எனக்கு பல ஐடியா கொடுத்துள்ளார். காளி கிராமத்து கதை. கிராமம் பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது. ஆனால் விஜய் கொடுத்த தகவல்கள் மிகவும் உதவியாக இருந்தது.
நடிகர்
வழக்கமாக இயக்குனர் தான் நடிகரின் வீட்டிற்கு சென்று கதை சொல்வார். ஆனால் விஜய் என் வீட்டிற்கு வந்து கதை கேட்டார். என் ஒரிஜினல் ஸ்க்ரிப்ட்டில் காளி என்ற கதாபாத்திரம் இருந்தது. அதை கேட்டவுடன் நம் படத்திற்கு காளி என்று பெயர் வைக்கலாமே என்றார் விஜய்.
சந்தேகம்
நான் ஒரு பெண் இயக்குனர் என்பதால் விஜய் ஆண்டனிக்கு என் திறமையின் மீது சந்தேகம் வந்ததே இல்லை. அவர் என் திறமை மீது முழு நம்பிக்கை வைத்து நடித்தார் என்கிறார் கிருத்திகா.
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?
-
ஒரே டிப்ரெஷன்.. வாழ்க்கையே போச்சு.. தப்பான முடிவை எடுக்க பார்த்த நடிகை.. சட்டென திறந்த கதவு!