ஜில்லா, வீரம் வெளியீடு... கடும் ட்ராபிக்கால் சென்னையில் வாகன ஓட்டிகள் அவதி!
சென்னை: ஜில்லா, வீரம் ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளியானதால் சென்னையில் கிண்டி கத்திப்பாரா தொடங்கி கே கே நகர் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஜில்லா மற்றும் வீரம் ஆகிய இரு படங்களும் சென்னை மற்றும் புறநகர்களில் ஏராளமான அரங்குகளில் வெளியாகின.
சென்னை அண்ணா சாலையின் தென்பகுதியான கிண்டி கத்திப்பாராவில் உள்ள ஜோதி திரையரங்கில் இரு படங்களுமே வெளியிடப்பட்டுள்ளன.

அடுத்து இரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள காசி திரையரங்கில் ஜில்லா திரையிடப்பட்டுள்ளது. அதற்கு அடுத்து சில மீட்டர் தூரத்தில் உள்ள உதயம் காம்ப்ளெக்சில் ஜில்லா, வீரம் படங்கள் திரையிடப்பட்டுள்ளன.
இந்த மூன்று அரங்குகளுமே கிட்டத்தட்ட நெடுஞ்சாலையில் உள்ளன.
இந்தப் படங்களுக்கு அதிகாலையிலிருந்தே சிறப்புக் காட்சிகள் போடப்பட்டதால், விஜய், அஜீத் ரசிகர்கள் திரண்டு வந்து மேள தாளம், பாலாபிஷேகத்தோடு முதல் காட்சி பார்த்தனர். சாலைகளில் பட்டாசுகள் கொளுத்தினர்.
சாலையை அடைத்துக் கொண்டு ரசிகர்கள் நின்றதால் காலையில் 11 மணி வரை இந்த சாலை திணறியது.


Click it and Unblock the Notifications











