Don't Miss!
- News IQவை டெஸ்ட் செய்யலாமா? இந்த படத்தில் குகை மனிதருக்குள் மறைந்திருக்கும் இன்னொரு மனித முகம்!
- Sports இனி 14 கோடி சிஎஸ்கே வீரருக்கு டாடா பைபை.. பழைய ஆல் - ரவுண்டர் பக்கம் திரும்பிய பிளெம்மிங்
- Lifestyle நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- Finance TikTok: கங்கணம் கட்டுக்கொண்டு சுத்தும் அமெரிக்கா.. 70 லட்சம் நிறுவனங்களுக்கு ஆப்பு..!!
- Automobiles ஓலா டவுசரை கழட்ட திட்டம் போடும் பஜாஜ்! இவ்வளவு கம்மி விலைக்கு சேத்தக் இவி வரப்போகுதா?
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
சுந்தர் சி. தயாரிப்பில் மிரட்ட வருகிறது 'ஹலோ நான் பேய் பேசுறேன்....'
சென்னை: அரண்மனை 2 வைத் தொடர்ந்து அடுத்ததாக ஹலோ நான் பேய் பேசுறேன் என்ற படத்தை, சுந்தர்.சி தயாரிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
அரண்மனை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பேய்களை ஆரம்பித்து வைத்த சுந்தர்.சி அரண்மனை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது அரண்மனை 2 படத்தையும் எடுத்து முடித்திருக்கிறார்.
த்ரிஷா, ஹன்சிகா, பூனம் பஜ்வா மற்றும் சித்தார்த் ஆகியோரின் நடிப்பில் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்திற்கு அரண்மனை 2 வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் மீண்டும் ஒரு பேய்ப் படத்தை தயாரிக்கவிருக்கிறார் சுந்தர்.சி.
அரண்மனை
தமிழ் சினிமாவில் மினிமம் கேரண்டி இயக்குநர் என்று பெயரெடுத்த சுந்தர்.சி கடந்த ஆண்டில் அரண்மனை படத்தை எடுத்து கோலிவுட்டில் பேய்களுக்கு பிள்ளையார் சுழி போட்டுக் கொடுத்தார். அரண்மனை படம் எதிர்பார்த்ததைவிட வசூலை வாரிக் குவித்தது, தொடர்ந்து தற்போது தமிழின் முன்னணி நாயகிகளான த்ரிஷா, ஹன்சிகாவை வைத்து அரண்மனை 2 படத்தையும் எடுத்திருக்கிறார். அடுத்த வருடத்தில் அரண்மனை 2 வெளியாகிறது.
நான் பேய் பேசுறேன்
அடுத்ததாக பேய்களை அடிப்படையாக வைத்து ஹலோ நான் பேய் பேசுறேன் என்ற படத்தை தயாரிக்கவிருக்கிறார் சுந்தர்.சி. வழக்கம் போல தானே இயக்குவார் என்று எதிர்பார்த்தால் அறிமுக இயக்குநர் பாஸ்கர் என்பவரை இயக்குனராகப் போட்டு, வெறுமனே படத்தை மட்டும் தயாரிக்க முடிவு செய்திருக்கிறார் சுந்தர்.சி.
நாளைய இயக்குனர்
பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற நாளைய இயக்குனர் போட்டியில் நடுவராகக் கலந்து கொண்ட சுந்தர்.சி, பாஸ்கரின் குறும்படத்தைப் பார்த்து வியந்து இந்த வாய்ப்பை அவருக்கு அளித்திருக்கிறார் என்று கூறுகின்றனர். படத்தில் நாயகனாக வைபவ் நடிக்க நாயகிகளாக ஓவியா மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் நடிக்கவிருக்கின்றனர்.
மொபைல் வழியாக
இதுவரை எத்தனையோ வழிகளில் பேயைப் பார்த்த ரசிகர்கள் இந்தப் படத்தில் புதிதான வழியில் பேயைப் பார்க்கவிருக்கின்றனர். ஆமாம் தமிழ் சினிமாக்களில் முதல்முறையாக மொபைல் வழியாக இந்தப் படத்தில் பேய் வரவிருக்கிறது. ஆனால் இதில் நடிக்கும் யாரும் பேயாக நடிக்கவில்லையாம். விரைவில் இந்தப் படம் தொடர்பான முறையான அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்னும் எப்படியெல்லாம் பேயைக் காட்டப் போறாங்களோ...
-
ஊட்டி மலை ப்யூட்டி.. உதகைக்கு டூர் போறீங்களா?.. அப்போ உங்க பிளே லிஸ்ட்ல இதெல்லாம் மிஸ் பண்ணிடாதீங்க!
-
கார்த்திக்கை கொண்டாடும் தொழிலாளர்கள்.. மீண்டும் தோற்கும் ஆனந்த்.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
Sivakarthikeyan: புல்லட்டை விட வலிமையானது வாக்கு.. ஆப்ரஹாம் லிங்கன் வாசகத்தை கூறிய சிவகார்த்திகேயன்!