Hema Committee: தமிழ் பட இயக்குநர் என்னை அப்யூஸ் பண்ணீட்டே இருந்தாரு.. பிரபல மலையாள நடிகை ஓபன் டாக்!

கொச்சி: இந்தியா முழுவதும் உள்ள ஒட்டுமொத்த திரையுலகமும் மிகவும் கூர்மையாக கவனித்து வரும் விஷயங்களில் ஒன்றாக இருப்பது, மலையாள சினிமா உலகை உலுக்கி வரும் ஹேமா கமிட்டி விவகாரம்தான். நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகள், அது தொடர்பாக கேரள மாநில அரசு, ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையிலான கமிட்டியை உருவாக்கியது. கடந்த 2017ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தக் கமிட்டி, அளித்த அறிக்கை பல திடுக்கிடும் உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது. இது மலையாள சினிமாவில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர் ரஞ்சித், நடிகர்கள் சித்திக், ஜெயசூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுமட்டும் இல்லமல் நடிகர் நிவின் பாலி மீதும் ஒருவர் புகார் கொடுத்துள்ளார். ஆனால், புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள நாளில் நிவின் பாலி கொச்சியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்தார் என விடுதி நிர்வாகமே தெரிவித்துள்ளது. இதனால், நடிகர்கள் மீது வேண்டுமென்றே சிலர் பொய்ப் புகார்களைக் கூறுகின்றனர் என்ற பேச்சும் இதனால் தொடங்கியுள்ளது.

hema committee kollywood

இந்நிலையில், பல நடிகைகள் தங்களுக்கு நடைபெற்ற, தாங்கள் எதிர்கொண்ட பாலியச் சீண்டல்கள் குறித்தும் பாலியல் வன்கொடுமைகள் குறித்தும் வெளியில் சொல்லி வருகின்றனர். அந்த வரிசையில் மலையாள படங்களில் நடித்து அதன் பின்னர் தமிழுக்கு அறிமுகமான நடிகை ஒருவர் தமிழ் பட இயக்குநர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்பதை பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். மலையாளத்தில் அத்வைதம், நீலக்குறுக்கன் போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை இவர். தற்ப்போது செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பேசியது மலையாள திரை உலகில் மட்டும் இல்லாமல், தமிழ் திரை உலகிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

hema committee kollywood

அதாவது, அந்த பேட்டியில் அவர் பேசுகையில், " அப்போது எனக்கு 18 வயது இருக்கும். எனது வீட்டிற்கு அந்த இயக்குநரும் அவரது மனைவியும் வந்தார்கள். இருவரும் எனது பெற்றோரிடம் பேசி, என்னை தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்தார்கள். இயக்குநர் தனது மனைவியுடன் வந்ததால், எனது பெற்றோரும் சம்மதித்தனர். நாங்கள் கேரளாவில் இருந்து, தமிழ்நாட்டிற்கு வந்தபோது அந்த இயக்குநரின் வீட்டிலேயே தங்கினோம்.

தொடக்கத்தில் எனது பெற்றோருக்கு அந்த இயக்குநர் மீது நம்பிக்கை வந்துவிட்டதால், என்னை இயக்குநர் மற்றும் அவரது மனைவியின் கட்டுப்பாட்டில் விட்டிவிட்டு கேரளாவிற்கு திரும்பிவிட்டனர். இப்படியான நிலையில், ஒருநாள் இயக்குநரின் மனைவி வீட்டில் இல்லாத நேரம் பார்த்து இயக்குநர், என்னை அவரது மகள் போல நினைத்ததாகக் கூறி முத்தம் வைத்தார். அதன் பின்னர் ஒருநாள் என்னுடன் குழந்தை பெற்றுக்கொள்ள ஆசைப்படுவதாகக் கூறி, என்னை பலவந்தமாக பாலியல் வன்கொடுமை செய்தார்.

hema committee kollywood

செக்ஸ் அடிமை: என்னால் இந்த விஷயத்தை வெளியில் கூற முடியவில்லை. கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு மேலாக அந்த இயக்குநர் என்னிடம் அப்படி நடந்து கொண்டார். நான் அவருக்கு ஒரு செக்ஸ் அடிமையாகவே இருந்தேன். அவர் நினைக்கும் நேரத்தில் எல்லாம் என்னை பாலியல் வன்கொடுமை செய்தார்" எனக் கூறியுள்ளார். மேலும் அவரிடம் அந்த இயக்குநர் யார் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டபோது, " அவர் யார் என்பதை நான் இங்கு கூற விரும்பவில்லை. ஆனல் கட்டாயம், காவல்துறையில் நான் கொடுக்கும் புகாரில் குறிப்பிடுவேன் எனக் கூறினார். நடிகையின் இந்த பேச்சினால் தற்போது தமிழ் இயக்குநர்கள் மத்தியில் பீதி கிளம்பியுள்ளதாக பேச்சுகள் அடிபடுகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X