Don't Miss!
- Finance களையெடுக்க வரும் மத்திய அரசு.. ஜியோ, ஏர்டெல் உடன் கூட்டணி.. OTP மோசடி-க்கு முடிவு..!!
- Sports தோனியை ரொம்ப நம்பாதீங்க! இதுக்கு மேல் ஏதும் செய்ய முடியாது! சிஎஸ்கே பயிற்சியாளர் பிளமிங் கருத்து
- News குரு வந்தால் கோடியில் கொடுப்பார்.. ஆனால் ஒரு சிக்கல்! ரிஷப ராசிக்கு குரு பெயர்ச்சி எப்படி இருக்கும்?
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Technology SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பாலிவுட் பற்றி பெரிய குண்டை தூக்கிப் போட்ட ஹேம மாலினி
மும்பை: நடிகர்களுக்கு எவ்வளவு வயதானாலும் ஹீரோவாகவே நடிக்கிறார்கள். என் வயது நடிகைகளை வைத்து யாரும் படம் எடுக்க விரும்பவில்லை என்று ஹேம மாலினி தெரிவித்துள்ளார்.
ஒரு காலத்தில் பாலிவுட்டின் கனவுக் கன்னியாக இருந்தவர் ஹேமமாலினி(68). தற்போது அவர் அம்மா, பாட்டி கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அரசியலிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். பாஜக எம்.பி.யாக உள்ளார்.
இந்நிலையில் ஹேமமாலினிக்கு ஒரு வருத்தம் உள்ளது.
நடிகைகள்
தற்போது என் வயது நடிகைகளை மையமாக வைத்து யாரும் படம் எடுக்க விரும்புவது இல்லை. தற்போதும் எங்களால் படத்தை எங்கள் தோளில் தாங்க முடியும். நம்புங்கள். இன்னும் சொல்லப்படாத கதைகள் உள்ளன என்கிறார் ஹேமமாலினி.
மாதுரி தீக்சித்
மாதுரி தீக்சித், ஜூஹி சாவ்லா, ப்ரீத்தி ஜிந்தா ஆகியோரை ஏன் அடிக்கடி ஹீரோயின்களாக பார்க்க முடிவது இல்லை. இந்த கேள்விக்கு பாலிவுட் இயக்குனர்கள் தான் பதில் அளிக்க வேண்டும்.
அனுஷ்கா
ஆண்களுக்கு வயதானாலும் கூட அவர் விரும்பும் வரை ஹீரோக்களாகவே நடிப்பார்கள். ஆனால் நடிகைகள் இளமையாக இருக்கும் வரை தான் மவுசா? என்று நடிகை அனுஷ்கா சர்மா கூட கேள்வி எழுப்பியுள்ளார்.
பாலிவுட்
பாலிவுட்டில் ஆண்களுக்கு ஒரு சட்டம், பெண்களுக்கு ஒரு சட்டமா என்று ஹேமமாலினியும், அனுஷ்கா சர்மாவும் கேட்டுள்ளனர். அவர்கள் கேட்பதும் நியாயம் தானே.