சிம்டாங்காரன் பாட்டு வரி புரிந்ததா?: பாடல் வரிகள் இதோ உங்களுக்காக
Recommended Video

சென்னை: சிம்டாங்காரன் பாடல் வரிகள் உங்களுக்காக.
விஜய் நடித்துள்ள சர்கார் படத்தில் வரும் சிம்டாங்காரன் பாடல் நேற்று மாலை வெளியிடப்பட்டது. பாடலை எத்தனை முறை கேட்டாலும் அதன் வரிகள் மட்டும் எளிதில் பிடிபடவில்லை.
சிம்டாங்காரன் என்ற வார்த்தைக்கு அந்த பாடலை எழுதிய விவேக்கே அர்த்தம் சொன்னதால் புரிந்தது.
புரியவில்லை
சிம்டாங்காரன் பாடல் வரிகள் வித்தியாசமாக உள்ளது. விவேக்கின் முயற்சியை பாராட்டியே ஆக வேண்டும். ஆனால் ஒன்றுமே புரியாததால் மக்கள் அந்த பாடலை கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையை சொல்ல வேண்டுமானால் விஜய் ரசிகர்களே இந்த பாடலை கேட்டு அதிருப்தி அடைந்துள்ளனர்.

வரிகள்
சிம்டாங்காரன் பாடல் வரிகள்....
பல்டி பாக்குற
டர்ல வுடனும் பல்து
வோர்ல்டு மொத்தமும்
அரள வுடனும் பிஸ்து
பிசுறு கெளப்பி
பெர்ள வுடனும் பல்து
ஏய்ய் நிக்கலு பிக்கலுமா
ஓ.... தொட்டனா தூக்கலுமா
மக்கரு குக்கருமா
போய் தரைல உக்கருமா
ஏய்ய் நிக்கலு பிக்கலுமா
ஓ.... தொட்டனா தூக்கலுமா
மக்கரு குக்கருமா
போய் தரைல உக்கருமா
சிம்டான்காரன்
எங்கனா நீ சீரன்
நிண்டேன் பாரேன் முஷ்டு
அப்டிகா போறேன்
ஓ..ஓ..ஓ..ஓ
சிம்டான்காரன்
சில்பினுக்கா போறேன்
பக்கில போடேன்
விருந்து வைக்கபோறேன்
ஓ..ஓ..ஓ..ஓ
பல்டி பாக்குற
டர்ல வுடனும் பல்து
வோர்ல்டு மொத்தமும்
அரள வுடனும் பிஸ்து
பிசுறு கெளப்பி
பெர்ள வுடனும் பல்து
ஏய்ய் நிக்கலு பிக்கலுமா
ஓ.... தொட்டனா தூக்கலுமா
மக்கரு குக்கருமா
போய் தரைல உக்கருமா
அந்தரு பண்ணிகினா தா.....
இந்தா நா... தா ....
மன்னவா நீ வா வா வா
முத்தங்களை நீ தா தா தா
பொழிந்தது நிலவோ
மலர்ந்தது கனவோ...ஓ...ஓ...
குபீலு பிஸ்து பல்து
குழு : விக்கலு விக்கலு
ஹே தொட்டனா தொட்டனா
விக்கலு விக்கலு
கொக்கலங்க கொக்கலங்க
கொக்கலங்க குபீலு
ஹைட்டுலிருந்து டைவு அடிச்சா
டம்மாலு
நம்ம புஷ்டிருக்க கோட்டையில்ல
அல்லா ஜோரும் பேட்டைல
சிரிசினுகுறோம் சேட்டையிலகுபீலு
பிசுறு கெளப்பு
பிசுறு கெளப்பு
கொக்கலங்க கொக்கலங்க
கொக்கலங்க குத்த போடு
பல்டி பாக்குற
டர்ல வுடனும் பல்து
வோர்ல்டு மொத்தமும்
அரள வுடனும் பிஸ்து
பிசுறு கெளப்பி
பெர்ள வுடனும் பல்து

விளம்பரம்
லிரிக்கல் வீடியோவை பார்த்தே யாருக்கும் பாடல் வரிகள் எளிதில் புரியவில்லை. அதனால் வரிகளை தெரிந்து கொள்ள மீண்டும் மீண்டும் அந்த வீடியோவை பார்த்தார்கள். இது கூட விளம்பர யுக்தி என்று கூறலாம். பாடல் வரிகள் புரியாவிட்டாலும் ரஹ்மானின் இசையில் ஏதோ கிக் கொடுக்கிறது.

ரஹ்மான்
ஆஸ்கர் வாங்கிய ரஹ்மான் நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்று ரசிகர்கள் நொந்துள்ளனர். ஆனால் நெடுங்காலம் கழித்து வித்தியாசமான முயற்சியில் இறங்கியிருக்கிறார் ரஹ்மான் என்பதை மறக்கக் கூடாது.


Click it and Unblock the Notifications











