Vidaamuyarchi - விடாமுயற்சி அப்டேட்.. அஜர்பைஜான் ஷெட்யூல் முடிந்தது.. அடுத்த லொகேஷன் எங்கே தெரியுமா?
சென்னை: துணிவு படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே தனது 62ஆவது படத்தில் நடிக்க கமிட்டானார். முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. ஆனால் அவர் சில காரணங்களால் வெளியேற தனது கதையோடு வந்தார் மகிழ் திருமேனி. அவர் இயக்குநராக ஃபிக்ஸ் செய்யப்பட்டார். படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. லைகா நிறுவனம் படத்தை தயாரித்துவருகிறது.
அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு படம் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தது. அதனையடுத்து அவர் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். தடையற தாக்க, மீகாமன், தடம், கலகத்தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கி கவனம் ஈர்த்த மகிழ் திருமேனி இந்தப் படத்தை இயக்கிவருகிறார். ஆக்ஷன் கதைகளை இயக்குவதில் மகிழ் திருமேனி கில்லாடி என்பதால் கண்டிப்பாக இந்தப் படம் மாபெரும் வெற்றி பெறும் என்று ஏகேவும், அவரது ரசிகர்களும் எதிர்பார்த்திருக்கின்றனர்.

தொடங்கிய ஷூட்டிங்: படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைத்ததோடு அதற்கு பிறகு எந்த அப்டேட்டும் வரவில்லை. இதனால் ரசிகர்கள் உச்சக்கட்ட சோகத்துக்கு சென்றனர். ஒருகட்டத்தில் விடாமுயற்சி படம் ட்ராப் ஆகிவிட்டதாகவும் செய்திகள் கசிந்தன. ஆனால் நல்வாய்ப்பாக அப்படி எதுவும் நடக்காமல் படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் தொடங்கியது. முதலில் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா கமிட்டானார். பிறகு அவருக்கு பதிலாக ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராக கமிட்டானார்.
திரிஷா, அர்ஜுன்: இப்படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அவர்களை ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து அஜித்குமார் எடுத்த புகைப்படங்கள் அத்தனையும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகின. தொடர்ந்து இரண்டு ஷெட்யூல்கள் அஜர்பைஜானில் நடந்தது. அஜித்தும் மும்முரமாக படப்பிடிப்பில் கலந்துகொண்டு அவ்வப்போது குட்டி பிரேக் மட்டும் எடுத்துக்கொண்டார். தனது குடும்பத்துடன் நேரத்தை செலவு செய்வதற்காக அவர் அந்த பிரேக்கை எடுத்ததாக கூறப்பட்டது.
மோசமான வானிலை?: இந்தச் சூழலில் சில நாட்களுக்கு முன்பு ஒரு தகவல் வெளியானது. அதன்படி அஜர்பைஜானில் மோசமான வானிலை நிலவிவருவதால் ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு படக்குழு இந்தியா திரும்ப திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அதுகுறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. மேலும் அஜர்பைஜானில் ஷூட்டிங்கை நிறுத்த மோசமான வானிலை காரணம் இல்லை; பட்ஜெட் மீறி சென்றுவிட்டது. அதனால்தான் பேக்கப் செய்துவிட்டார்கள் என்றும் ஒரு தகவல் அரசல் புரசலாக ஓடியது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு: இந்நிலையில் அஜித்தின் மேனேஜர் தனது ட்விட்டர் பக்கத்தில், அஜித்குமாரின் புகைப்படங்களை பகிர்ந்து, 'அஜர்பைஜானில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது.விரைவில் புதிய லொகேஷன் தேர்வு செய்யப்படும்' என குறிப்பிட்டிருக்கிறார். அந்த ட்வீட்டில் அஜித் கருப்பு கலர் கோட்டில் கழுத்தில் துண்டை போட்டுக்கொண்டு மாஸாக நடந்துவருவது போன்ற புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. இதனையடுத்து அந்த ட்வீட்டை அஜித் ரசிகர்கள் ட்ரெண்டாக்கிவருகின்றனர்.
எப்போது ரிலீஸ்?: இதற்கிடையே விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் 75 சதவீதம் அஜர்பைஜானிலேயே முடிந்துவிட்டதாக ஒரு பேச்சு இருக்கிறது. இன்னும் சில காட்சிகளும், க்ளைமேக்ஸ் காட்சிகளும் மட்டும்தான் எடுக்கப்பட வேண்டியிருக்கிறது. ஒன்று அதனை சென்னையிலேயே செட் போட்டு எடுத்துவிடுவார்கள் இல்லையென்றால் வேறு லொக்கேஷன் தேர்வு செய்வார்கள் என்கிறார்கள் படக்குழுவுக்கு நெருக்கமானவர்கள். விடாமுயற்சி படத்தை ஏப்ரல் அல்லது மே மாதத்தில் திரைக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில் மகிழ் திருமேனி தீவிரம் காட்டிவருவதாகவும் கூறப்படுகிறது.
என்ன கதை?:அதேபோல் விடாமுயற்சி படத்தின் கதை குறித்தும் சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்படுகிறது. அதாவது அஜித்தும், திரிஷாவும் இந்தப் படத்தில் கணவன் மனைவியாக நடிக்கிறார்கள். அவர்கள் ஒரு வேலை விஷயமாக அஜர்பைஜான் செல்லும்போது அங்கு வைத்து திரிஷா கடத்தப்படுகிறார். அவரை அஜித் எப்படி மீட்பார் என்பதுதான் படத்தின் ஒன்லைன் என்று பேச்சு எழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











