Don't Miss!
- News கட்டுக்கதை அவிழ்த்து விடுறாங்க.. குடும்பத்தினரை பற்றி அவதூறு பரப்புறாங்க.. சசிகாந்த் செந்தில் பளீர்
- Education தமிழக கல்லூரி மாணவர் பதிவு விண்ணப்ப சாளரத்தில் மாற்றம்...!
- Lifestyle இந்த 5 ராசிகளில் பிறந்த பெண்கள் வீட்டையும், நாட்டையும் ஆள்வதற்கு பிறந்தவர்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Technology பொளக்குது ஆர்டர்.. ரூ.7,599 பட்ஜெட்ல 12GB ரேம்.. அல்ட்ரா பிரீமியம் கேமரா லுக்.. 1டிபி மெமரி.. எந்த மாடல்?
- Automobiles ரூ2.11 லட்சம் செலவு செய்தது கணவன் முகத்துல இதை பார்க்க தான்! கல்யாணத்தன்று மணப்பெண் செய்த சம்பவம்!
- Finance தங்கம் விலை இமாலய உச்சத்தை தொட்டது.. சென்னை, கோவை, மதுரையில் இன்று என்ன விலை..!!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
வில்லன் நடிகரை பற்றி இப்படி கிளப்பிட்டாய்ங்களே... குடும்பம் மறுப்பு
திருவனந்தபுரம்: மருத்துவமனையில் சீரியசாக இருப்பதாகவும் சிகிச்சைக்கு பணமின்றி கஷ்டப்படுவதாகவும் வந்த தகவலை வில்லன் நடிகர் குடும்பம் மறுத்துள்ளது.
தமிழில், ஆண்களை நம்பாதே, கழுகுமலை கள்ளன், தர்மதுரை, தங்கபாப்பா, கர்ணா, ஏழுமலை, சந்திரமுகி, ஆதிபகவன் உட்பட பல படங்களில் வில்லனாக நடித்திருப்பவர் மலையாள நடிகர் மோகன் ராஜ்.
கீரிக்காடன் ஜோஸ் என்றும் அழைக்கப்படும் இவர், மலையாளம் தவிர தெலுங்கு உட்பட பல்வேறு மொழிகளில் 80 மற்றும் 90 களில் பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.
சமூக வலைத்தளங்கள்
இவர் திருவனந்தபுரம் மருத்துவமனையில் சீரியசாக இருப்பதாகவும் மருத்துவச் செலவுக்கு பணம் இல்லாமல் கஷ்டப்படுவதாகவும் உதவியை எதிர்பார்ப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாயின.
கால் பிரச்னை
இந்நிலையில் நடிகரின் குடும்பம் இந்தச் செய்தியை மறுத்துள்ளது. அவருக்கு கால் பிரச்னைக்காக சென்னையில் சிகிச்சை நடந்ததாகவும் பொருளாதார உதவியை யாரிடமும் எதிர்பார்க்கவில்லை என்றும் அவரது குடும்பம் தெரிவித்துள்ளது.
நடிகர் சங்கம்
இதுபற்றி மலையாள நடிகர் சங்க செயலாளர் எடவேளா பாபு கூறும்போது, மருத்துவமனையில் இருக்கும் நடிகர் மோகன்ராஜிடம் பேசினேன். இப்போது நன்றாக இருக்கிறார். அவர் குடும்பத்தினரிடமும் பேசினேன். பயப்படும்படி ஒன்றும் இல்லை.
பொருளாதார பிரச்னை
அவர்களுக்குப் பொருளாதார பிரச்னையும் இல்லை. அவரைக் கவனித்துக்கொள்ள தயாரிப்பு நிர்வாகி பாஷா இருக்கிறார். இப்போது திருவனந்தபுரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். சமூக வலைத்தளங்களில் வெளியானத் தகவல்கள் தவறானவை . அவருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம் என்றார்.