Don't Miss!
- News கலக்கிய கள்ளக்குறிச்சி.. அதிகபட்ச வாக்குகள் பதிவு! உற்றுநோக்கும் வேட்பாளர்கள்! கள நிலவரம் என்ன
- Sports உள்ளூர் வீரரை களமிறக்கிய ருதுராஜ்.. இம்பேக்ட் கொடுக்காத சமீர் ரிஸ்வி.. கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Lifestyle சப்பாத்திக்கு ஒருடைம் உருளைக்கிழங்கு வெச்சு இப்படி கிரேவி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்...
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
கர்ணன் படத்துக்கு டப்பிங் கொடுக்காததுக்கு இதுதான் காரணம்... வெளிப்படுத்திய லால்
சென்னை : கர்ணன் படத்தில் மலையாள இயக்குநரும் -நடிகருமான லால் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
Recommended Video
யமராஜா என்ற கேரக்டரில் நடித்திருந்த அவர் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு டப்பிங் கொடுக்கவில்லை.
மோசமான துயரம்.. கொரோனாவுக்கு இளம் மனைவியை பறிகொடுத்த இயக்குநர் அருண்ராஜா.. பதறும் பிரபலங்கள்!
இந்நிலையில் தற்போது இதற்கான காரணத்தை அவர் சமூகவலைதளத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.
கவனம் பெற்ற யமராஜா கேரக்டர்
சமீபத்தில் தனுஷ், லால் உள்ளிட்டவர்களின் நடிப்பில் வெளியான கர்ணன் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வித்தியாசமான கதைக்களத்துடன் வெளிவந்த இந்த படத்தில் அனைத்து கேரக்டர்களும் பேசப்பட்டது. முக்கியமாக தனுஷ்க்கு அடுத்தபடியாக படத்தில் லால் நடித்திருந்த யமராஜா கேரக்டர் கவனம் பெற்றுள்ளது.
ரசிகர்கள் கேள்வி
தனுஷின் நலம்விரும்பியாக வரும் யமராஜா படத்தில் வயதான பெண்ணிடம் பணத்தை திருட முயற்சிப்பது போல வரும் இந்த கேரக்டர் படத்தில் முக்கியமானது. ஆனால் முக்கியமான இந்த கேரக்டருக்கு மலையாள நடிகரும் இயக்குநருமான லால் டப்பிங் கொடுக்கவில்லை. இது ரசிகர்களிடையே கேள்விகளை எழுப்பியது.
லால் வெளிப்படை
இந்நிலையில் இந்த கேரக்டருக்கு தான் ஏன் டப்பிங் கொடுக்கவில்லை என்பதற்கான காரணத்தை லால் தற்போது தனது சமூகவலைதளத்தில் வெளிப்படுத்தியுள்ளார். திருநெல்வேலியை கதைக்களமாக கொண்ட இந்த படத்திற்காக தான் டப்பிங் கொடுக்க சென்னை வந்ததாகவும் ஆனால், அந்த வழக்குமொழியை பேச தனக்கு கடினமாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
டப்பிங் செய்யவில்லை
கேரளாவிலும் திரிச்சூர் பகுதி வழக்கை பேசுவது கடினமானது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். இதனிடையே யமராஜா என்ற அந்த கேரக்டரை 100 சதவிகிதம் சிறப்பாக கொண்டுவர தான் விரும்பியதாகவும் அதனால்தான் தான் டப்பிங் செய்யவில்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
டைரக்டரிடம் கோரிக்கை
படத்தின் முக்கியமான மற்ற கேரக்டர்கள் நெல்லையை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்கு அந்த மொழியை பேசுவது சுலபமாக இருந்ததாகவும் அவர் குறிபிபட்டுள்ளார். தான் பேசினால் அந்த கேரக்டரின் தன்மை மாற வாய்ப்புள்ளதால் டைரக்டர் மற்றும் தயாரிப்பாளரிடம் வேறு ஒருவரை கொண்டு டப்பிங் செய்ய தான் கேட்டுக் கொண்டதாகவும் லால் தெரிவித்துள்ளார்.