Don't Miss!
- Sports என்னங்க சொல்றீங்க? சிஎஸ்கேக்கு வருகிறாரா ஆஸி. வேகம் ஹேசல்வுட்.. உண்மை என்ன?
- News தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கும் இன்று லோக்சபா தேர்தல்: மாதிரி வாக்குப்பதிவு தொடங்கியது!
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சென்சார் போர்ட்டுகே டஃப் கொடுத்த இயக்குனர்… ரோபோ சங்கர் பேச்சு
சென்னை : சென்சார் போர்ட்டுக்கு பயப்படாத ஒரு இயக்குனர் யாருனா அது நம்ம இயக்குனர் மித்ரன் தான் என்று கூறிய ரோபோ சங்கர். சென்சார் போர்டுதான் படத்துக்கு டஃப் கொடுக்கும் ஆனால், சென்சார் போர்ட்டுக்கே டஃப் கொடுத்த ஒரே இயக்குனர் இவர் தான் என்று கூறினார்.
ஹீரோ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைப்பெற்றது. இதில் பேசிய ரோபோ சங்கர், தயாரிப்பாளர் கோட்டாப்பாடி ஜே ராஜேஷ் பற்றி சொல்லனும்னா அவர் ஒரு நல்ல மனம் படைத்த மனிதர், அதற்கு உதாரணமா சொல்லனும்னா, வழக்கமா எல்லாத் தயாரிப்பாளர்களும் சம்பளத்தை ஆரம்பத்தில் பாதி, முடிவில் என பிரித்துத்தான் தருவாங்க. ஆனால் இந்த தயாரிப்பாளர் எனக்கு படம் ஆரம்பிக்கும் இரு மாதங்களுக்கு முன்பே முழு சம்பளத்தையும் கொடுத்து விட்டார். இப்படி ஒரு தயாரிப்பாளரை நான் எங்குமே பார்த்ததே இல்லை என்று ரோபோ சங்கர் கூறினார்.
மேலும் பேசிய அவர், இயக்குனர் பி.எஸ்.மித்ரனை இரும்புதிரை படத்தில் நடித்ததின் மூலமே எனக்குத் தெரியும். அவர் சென்சாருக்கு பயப்படாத ஒரு இயக்குனர், இரும்புதிரை சென்சாரின் போது அந்த சீன் கட் பண்ணுங்க, இந்த சீன் கட் பண்ணுங்க என்று சொல்லும்போதெல்லாம் அதற்கான ஆதாரங்களை மெனக்கெட்டு எடுத்து சென்று சண்டை போட்டு, 2 மணி முதல் 7 மணி வரை போராடி படத்திற்கு எந்த கட்டும் இன்றி படத்தை தணிக்கை குழுவிடமிருந்து யூ சான்றிதழை வாங்கினார். பொதுவா சென்சார் போர்டுதான் படத்துக்கு டஃப் கொடுக்கும் ஆனால், சென்சார் போர்ட்டுக்கே டஃப் கொடுத்த ஒரே இயக்குனர் இவர் தான் என்று நகைக்சுவையுடன் குறிப்பிட்டார்.
சிவகார்த்திகேயனை பற்றி பேசிய ரோபோ சங்கர், ஆரம்ப காலத்திலிருந்து இதுவரை நான் எப்படி பார்த்தேனோ அப்படி தான் இன்னமும் இருக்கிறான் என் தம்பி என்று கூறினார். இப்படம் நிச்சயம் வெற்றி அடையும், சிவகார்த்திகேயனுக்கு இது மிக பெரிய வெற்றி படமாக அமைய வாழ்த்துகிறேன் என்று ரோபோ சங்கர் கூறினார்.
இப்படத்தில் சிவகார்த்திகேயன், அர்ஜீன், கல்யாணி ப்ரியதர்ஷன், அபைய் தியோல், ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து இருக்கின்றனர். இப்படம் டிசம்பர் 20 வெளியாக உள்ளது.
-
மவனே யாருகிட்ட.. மேனேஜரை அலறவிட்ட கார்த்திக்..என்னாச்சு தெரியுமா? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
சூரியன் படத்துல சரத்குமாருக்கு பதில் இவரா?.. கவுண்டமணி சரியான நக்கல் புடிச்ச ஆளு.. பவித்ரன் பேட்டி!