Don't Miss!
- Lifestyle திருமணம் ஆக இருக்கும் இளம்பெண்கள் இந்த ஜூஸை குடியுங்கள்.. முகம் பொலிவுறும்..!
- News கலக்கிய கள்ளக்குறிச்சி.. அதிகபட்ச வாக்குகள் பதிவு! உற்றுநோக்கும் வேட்பாளர்கள்! கள நிலவரம் என்ன
- Sports உள்ளூர் வீரரை களமிறக்கிய ருதுராஜ்.. இம்பேக்ட் கொடுக்காத சமீர் ரிஸ்வி.. கொஞ்சம் கூட பொறுப்பே இல்ல!
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
'ஹீரோ': சிவகார்த்திகேயன் படத்திற்கு பூஜை போட்ட உடனேயே பிரச்சனையா?
Recommended Video
சென்னை: சிவகார்த்திகேயன் படத்தின் தலைப்பு தன்னுடையது என்று இயக்குநர் ஆனந்த் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இரும்புத்திரை படம் புகழ் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கல்யாணி ப்ரியதர்ஷன் உள்ளிட்டோர் நடிக்கும் படத்திற்கு நேற்று பூஜை போட்டு ஹீரோ என்று பெயர் வைத்தனர்.
புதுமுக இயக்குநர் ஆனந்த் அண்ணாமலை விஜய் தேவரகொண்டாவை வைத்து இயக்கும் படத்திற்கும் ஹீரோ என்று தான் பெயர் வைத்துள்ளனர்.
வீட்டில் யாரை காதலிக்காதே என்றார்களோ அந்த நடிகரை காதலிக்கும் வாரிசு நடிகை
ஹீரோ
ஹீரோ தலைப்பு எனக்கு சொந்தமானது. அதை எப்படி சிவகார்த்திகேயன் படத்திற்கு வைக்கலாம் என்று ஆனந்த் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். தனது தலைப்பை பயன்படுத்த அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
படம்
காக்கா முட்டை படத்திற்கு வசனம் எழுதியுள்ளேன். குற்றமே தண்டனை படத்திற்கு மணிகண்டனுடன் சேர்ந்து திரைக்கதை எழுதியிருக்கிறேன். பல நாவல்கள் எழுதியுள்ளேன். விஜய் தேவரகொண்டாவை வைத்து படம் ஒன்றை இயக்குகிறேன். படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க உள்ளது என்று ஆனந்த் தெரிவித்துள்ளார்.
பதிவு
என் படத்திற்கு ஹீரோ என்ற தலைப்பை தேர்வு செய்து ஓராண்டுக்கு முன்பே தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பதிவு செய்தோம். அப்படி இருக்கும்போது சிவகார்த்திகேயன் படத்திற்கு ஹீரோ என்று தலைப்பு வைத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்கிறார் ஆனந்த்.
சிவகார்த்திகேயன்
ஹீரோ என்ற தலைப்பு எங்களுக்கு தான் சொந்தம். அதற்கான ஆதாரம் உள்ளது. இந்த தலைப்பை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம். இது தொடர்பாக தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு கடிதம் எழுத உள்ளோம் என்று ஆனந்த் அண்ணாமலை கூறியுள்ளார்.