பெர்செண்டேஜுக்கு மாறும் ஹீரோக்கள்... நல்ல பாதைக்கு மாறுதா தமிழ் சினிமா?
ஒரு படம் எடுக்கும் பட்ஜெட்டில் முக்கால்வாசியை சம்பளமாகக் கேட்கிறார்கள் ஹீரோக்கள். எந்த ஹீரோவாலும் தொடர் வெற்றியைக் கொடுக்க முடியவில்லை. இதனால் பணம் போடும் தயாரிப்பாளர்கள் முதல் தியேட்டர் அதிபர்கள் வரை பாதிக்கப்படுகிறார்கள்.
பாலிவுட்டில் இருப்பது போல இங்கேயும் பெர்செண்டேஜ் கணக்கில் நடிகர்களுக்கு சம்பளம் கொடுக்கும் முறை வந்தால் தமிழ் சினிமாவுக்கு நல்லது என்ற டாக் ஏற்கெனவே இருந்து வந்தது.

சூப்பர் ஸ்டார் ரஜினி, தான் நடிக்கும் படங்களின் ஏரியா உரிமையை வாங்கி தயாரிப்பாளர்களுக்கு உதவி வந்தார். இப்போது இருக்கும் ஹீரோக்களில் ஆரம்பம் படத்தில் இருந்து அதைத் தொடங்கி வைத்தது அஜித் தான். இத்தனை நாட்களாக படத்தின் லாப நஷ்டத்தில் பங்கெடுக்க யோசித்து வந்த ஹீரோக்கள் இப்போதுதான் இறங்கி வந்திருக்கிறார்கள்.
ஜிவி.பிரகாஷ், விஷால், விஜய்சேதுபதி ஆகியோர் நல்லக் கதைகள் என்றால் பெர்செண்டேஜில் சம்பளம் பேசுகிறார்களாம். அதாவது லாபத்தில் ஒரு பங்கு என்று...
நல்லது நடந்தா சரி!


Click it and Unblock the Notifications











