Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
சொல்லாமல் கொள்ளாமல் கம்பி நீட்டிய ஹீரோயின்... பர்த்டே கேக்குடன் காத்திருந்த தயாரிப்பாளர்!
வெளியிலிருந்து பார்க்க, சினிமா உலகம் கவர்ச்சியும் சுவாரஸ்யமும் நிறைந்ததாக இருந்தாலும், ஒரு படத்தை எடுத்து முடிப்பதற்குள் தயாரிப்பாளர்கள் முழி பிதுங்கி மூலையில் நிற்க வேண்டியதாகிவிடுகிறது.
இன்று நடந்திருக்க வேண்டிய ஒரு ஷூட்டிங், வளர்ந்து வரும் நடிகை ஒருவரின் அலட்சியத்தால் ரத்தாகி, அதன் தயாரிப்பாளருக்கு அநியாயத்துக்கு இரண்டு மூன்று லட்சங்கள் இழப்பைத் தந்திருக்கிறது.
நடிகை பெயர் ஐஸ்வர்யா தத்தா. தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஆறாது சினம் படங்களின் நாயகி. இப்போது மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தின் இறுதி நாள் ஷூட்டிங் இன்று கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள ஒரு உணவகத்தில் நடக்கவிருந்தது. இன்றைய ஷூட்டிங் நடந்திருந்தால், மாலையில் பூசணிக்காய் உடைத்திருப்பார்கள். இத்தனைக்கும் பங்கேற்கும் அத்தனை பேரும் டாப் டெக்னீஷியன்கள். தயாரிப்பாளரும் லேசுப்பட்டவர் அல்ல.
காலையிலேயே தயாரிப்பாளர், டெக்னீஷியன்கள், ஹீரோ உள்ளிட்ட துணை நடிகர்கள் என சகலரும் ஆஜர். ஹீரோயினுக்கு மும்பையிலிருந்து டிக்கெட் போட்டும் கொடுத்திருந்தார்கள். அவரது டேமேஜர்.. ஸாரி மேனேஜர் ஷான் என்பவரும் ஹீரோயின் வந்துவிடுவார் என்றுதான் கூறி வந்தார். கடைசி நாள் ஷூட் என்பதால் முன்கூட்டியே மீதி சம்பளம் மொத்தத்தையும் செட்டில் பண்ணியிருந்தார் தயாரிப்பாளர்.
ஆனால் ஐஸ்வர்யா தத்தா சொன்னபடி வரவே இல்லை. அவருக்குப் போன் அடித்தால் ஸ்விட்ச் ஆஃப். டேமேஜருக்குப் போன் பண்ணால் இதோ அதோ என்று டபாய்த்துக் கொண்டே இருந்தார். ஐஸ்வர்யாவின் பாய் ப்ரண்ட் ஒருவர் மும்பையில் இருக்கிறார். அந்தப் பார்ட்டியைத் தொடர்பு கொண்டபோதுதான், ஐஸ்வர்யா சென்னையிலேயே இல்லை, எஸ் ஆர் பிரபாகரன் இயக்கும் புதுப் படத்தில் நடிக்க பொள்ளாச்சிக்குப் போய்விட்டார் என்ற உண்மை தெரிந்தது.
இதை கடைசி வரை தயாரிப்பாளரிடம் சொல்லவே இல்லை டேமேஜர் ஷான். ஆனால் இரண்டு தயாரிப்பாளர்களிடமும் பணத்தை வாங்கிக் கொண்டு, ஒரு ஷூட்டிங்குக்கு மட்டும் ஹீரோயினை அனுப்பி வைத்திருக்கிறார் அவர்.
இன்று மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன படத்தின் தயாரிப்பாளருக்கு பிறந்த நாள் வேறு. அதற்காக கேக் வாங்கி வைத்துக் கொண்டு, 'ஹீரோயின் வந்ததும் கேக் வெட்டலாம்' என்று காத்திருந்தாராம். ஷூட்டிங் ஏற்பாட்டுக்காக செய்யப்பட்ட மூன்று லட்ச ரூபாய் எள்ளானதுதான் மிச்சம்!
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
-
என்னது விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போவது இவரா?.. தரமான சம்பவமா இருக்குமோ?.. அப்போ அவங்க நிலைமை
-
மனோகரியின் கோபத்தால் கவினுக்கு வந்த ஆபத்து .. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!