Don't Miss!
- News மோடியின் முஸ்லிம் பேச்சு.. விமர்சித்த பாஜக சிறுபான்மை அணித் தலைவர் கட்சியிலிருந்து டிஸ்மிஸ்
- Lifestyle கோடையில் செல்லப்பிராணிகளை பராமரிப்பது எப்படி ? இதோ டிப்ஸ்..!
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Sports ரோஹித்துக்கு விசுவாசமாக இருந்த வீரரை அணியை விட்டே நீக்கிய ஹர்திக் பாண்டியா? கதறும் ரசிகர்கள்
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஏழுமலையான தரிசிக்க வந்த சினேகா, தீபிகா படுகோனே, ஜூகிசாவ்லா: ரசிகர்கள் குவிந்தனர்
திருப்பதி: ஸ்ரீ ராமநவமியை ஒட்டி திருமலை திருப்பதியில் உள்ள ஏழுமலையான நேற்று பாலிவுட், கோலிவுட் நடிகைகள் தரிசனம் செய்தனர். அவர்களைக் காண ரசிகர்கள் குவிந்ததால் நெரிசல் ஏற்பட்டது.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
பிரம்மோற்சவம், திருவிழா நாட்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிவார்கள்.
ஸ்ரீ ராமநவமி
திருமலையில் ஸ்ரீராமநவமியை உற்சவம் மிக கோலாகலமாக செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்த உற்ஸவத்தில் ஒரு பாகமாக காலை 7 மணி முதல் 8 மணி வரை ஸ்ரீசீதா ராம லட்சுமணருக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற உள்ளது. மாலை 7 மணி முதல் 9 மணி வரை மாட வீதியில் அனுமந்த வாகன சேவையும், இரவு 10 மணி முதல் 11 மணி வரை ஸ்ரீராம நவமி ஆஸ்தானமும் நடைபெற்றது.
சினேகா – பிரசன்னா
தமிழ் நடிகை சினேகா தனது கணவர் பிரசன்னா உடன் தம்பதி சமேதராக வந்து ஏழுமலையானை தரிசனம் செய்தார். காலையில் நடந்த சுப்ரபாத சேவையின்போது இவர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஜூகி சாவ்லா
இதே தரிசன நேரத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஜூகி சாவ்லா ஏழுமலையானை தரிசித்தார். திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்தவுடன் ஒரு சக்தி கிடைத்ததாக உணர்ந்தேன். சொல்ல முடியாத அளவுக்கு திருப்தி கிடைத்தது. அதனால்தான் கோடான கோடி பேர் ஏழுமலையான் கோவிலுக்கு வருகிறார்கள் என்றார்.
தீபிகா படுகோனே
நைவேத்திய இடைவெளியின் போது நடிகை தீபிகா படுகோனே தனது குடும்பத்தினருடன் வந்து சாமி தரிசனம் செய்தார். அவர்களுக்கு ஆலய நிர்வாகிகள் தரிசனத்துக்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்து கொடுத்தனர். வேத பண்டிதர்கள் ஆசி வழங்கினார்கள்.
ரசிகர்கள் கூட்டம்
தரிசனம் முடிந்த பின்னர் வெளியே வந்த தீபிகா படுகோனேவைப் பார்க்க ரசிகர்கள் கூட்டம் கூடியது. கைகுலுக்க ரசிகர்கள் முண்டியடித்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்