Don't Miss!
- News கார்த்தி சிதம்பரத்துக்கு குட்நியூஸ்.. பாஸ்போர்ட்டை 10 ஆண்டு புதுப்பித்து வழங்க ஹைகோர்ட் உத்தரவு
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
ஏழுமலையான தரிசிக்க வந்த சினேகா, தீபிகா படுகோனே, ஜூகிசாவ்லா: ரசிகர்கள் குவிந்தனர்
திருப்பதி: ஸ்ரீ ராமநவமியை ஒட்டி திருமலை திருப்பதியில் உள்ள ஏழுமலையான நேற்று பாலிவுட், கோலிவுட் நடிகைகள் தரிசனம் செய்தனர். அவர்களைக் காண ரசிகர்கள் குவிந்ததால் நெரிசல் ஏற்பட்டது.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
பிரம்மோற்சவம், திருவிழா நாட்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிவார்கள்.
ஸ்ரீ ராமநவமி
திருமலையில் ஸ்ரீராமநவமியை உற்சவம் மிக கோலாகலமாக செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்த உற்ஸவத்தில் ஒரு பாகமாக காலை 7 மணி முதல் 8 மணி வரை ஸ்ரீசீதா ராம லட்சுமணருக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற உள்ளது. மாலை 7 மணி முதல் 9 மணி வரை மாட வீதியில் அனுமந்த வாகன சேவையும், இரவு 10 மணி முதல் 11 மணி வரை ஸ்ரீராம நவமி ஆஸ்தானமும் நடைபெற்றது.
சினேகா – பிரசன்னா
தமிழ் நடிகை சினேகா தனது கணவர் பிரசன்னா உடன் தம்பதி சமேதராக வந்து ஏழுமலையானை தரிசனம் செய்தார். காலையில் நடந்த சுப்ரபாத சேவையின்போது இவர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஜூகி சாவ்லா
இதே தரிசன நேரத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஜூகி சாவ்லா ஏழுமலையானை தரிசித்தார். திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்தவுடன் ஒரு சக்தி கிடைத்ததாக உணர்ந்தேன். சொல்ல முடியாத அளவுக்கு திருப்தி கிடைத்தது. அதனால்தான் கோடான கோடி பேர் ஏழுமலையான் கோவிலுக்கு வருகிறார்கள் என்றார்.
தீபிகா படுகோனே
நைவேத்திய இடைவெளியின் போது நடிகை தீபிகா படுகோனே தனது குடும்பத்தினருடன் வந்து சாமி தரிசனம் செய்தார். அவர்களுக்கு ஆலய நிர்வாகிகள் தரிசனத்துக்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்து கொடுத்தனர். வேத பண்டிதர்கள் ஆசி வழங்கினார்கள்.
ரசிகர்கள் கூட்டம்
தரிசனம் முடிந்த பின்னர் வெளியே வந்த தீபிகா படுகோனேவைப் பார்க்க ரசிகர்கள் கூட்டம் கூடியது. கைகுலுக்க ரசிகர்கள் முண்டியடித்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.