Don't Miss!
- News "யாரும் ஒழுங்கா வேலை பார்க்கல.." அதிமுக நிர்வாகிகளிடம் கடிந்து கொண்டாரா எடப்பாடி? வெளியான பரபர தகவல்
- Technology வீட்டுக்கு 1 வாங்குவீங்க.. 8GB மெமரி.. 50W சினிமாட்டிக் சவுண்ட்.. இரண்டு 4K டிவிகளை அறிமுகம் செய்த VU..
- Automobiles ராயல் என்பீல்டு, ஹோண்டா பைக்கை ஓட்டி ஓட்டி போரடிச்சு போச்சா.. இந்தியாவில் கால் தடம் பதிக்கிறது புதிய பிராண்டு!
- Finance அட்சய திருதியை-க்கு தங்க நகை வாங்கப் போறீங்களா.. இந்த தவறை மட்டும் செஞ்சிடாதீங்க!
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஏழுமலையான தரிசிக்க வந்த சினேகா, தீபிகா படுகோனே, ஜூகிசாவ்லா: ரசிகர்கள் குவிந்தனர்
திருப்பதி: ஸ்ரீ ராமநவமியை ஒட்டி திருமலை திருப்பதியில் உள்ள ஏழுமலையான நேற்று பாலிவுட், கோலிவுட் நடிகைகள் தரிசனம் செய்தனர். அவர்களைக் காண ரசிகர்கள் குவிந்ததால் நெரிசல் ஏற்பட்டது.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
பிரம்மோற்சவம், திருவிழா நாட்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிவார்கள்.
ஸ்ரீ ராமநவமி
திருமலையில் ஸ்ரீராமநவமியை உற்சவம் மிக கோலாகலமாக செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்த உற்ஸவத்தில் ஒரு பாகமாக காலை 7 மணி முதல் 8 மணி வரை ஸ்ரீசீதா ராம லட்சுமணருக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற உள்ளது. மாலை 7 மணி முதல் 9 மணி வரை மாட வீதியில் அனுமந்த வாகன சேவையும், இரவு 10 மணி முதல் 11 மணி வரை ஸ்ரீராம நவமி ஆஸ்தானமும் நடைபெற்றது.
சினேகா – பிரசன்னா
தமிழ் நடிகை சினேகா தனது கணவர் பிரசன்னா உடன் தம்பதி சமேதராக வந்து ஏழுமலையானை தரிசனம் செய்தார். காலையில் நடந்த சுப்ரபாத சேவையின்போது இவர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஜூகி சாவ்லா
இதே தரிசன நேரத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஜூகி சாவ்லா ஏழுமலையானை தரிசித்தார். திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்தவுடன் ஒரு சக்தி கிடைத்ததாக உணர்ந்தேன். சொல்ல முடியாத அளவுக்கு திருப்தி கிடைத்தது. அதனால்தான் கோடான கோடி பேர் ஏழுமலையான் கோவிலுக்கு வருகிறார்கள் என்றார்.
தீபிகா படுகோனே
நைவேத்திய இடைவெளியின் போது நடிகை தீபிகா படுகோனே தனது குடும்பத்தினருடன் வந்து சாமி தரிசனம் செய்தார். அவர்களுக்கு ஆலய நிர்வாகிகள் தரிசனத்துக்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்து கொடுத்தனர். வேத பண்டிதர்கள் ஆசி வழங்கினார்கள்.
ரசிகர்கள் கூட்டம்
தரிசனம் முடிந்த பின்னர் வெளியே வந்த தீபிகா படுகோனேவைப் பார்க்க ரசிகர்கள் கூட்டம் கூடியது. கைகுலுக்க ரசிகர்கள் முண்டியடித்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.