Don't Miss!
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- News அண்ணாமலை வேட்பு மனுவில் செய்த 2 மிகப்பெரிய தவறு.. திமுக எதுவுமே பேசல.. கொந்தளித்த நாதக வழக்கறிஞர்!
- Technology Jio-வை பொலி போட்ட BSNL.. ரூ.600 க்கு 4000GB டேட்டா.. 125 Mbps ஸ்பீட்.. இலவச OTT.. 2 புதிய திட்டங்கள் அறிமுகம்!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
விநியோகப் பிரச்னை.. நடிகர் விஜய் சேதுபதி படத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்.. நீதிமன்றம் உத்தரவு
சென்னை: விஜய் சேதுபதியின் மாமனிதன் படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை நீதிமன்றம் நீக்கியுள்ளது.
விஜய் சேதுபதி, காயத்ரி நடித்துள்ள படம் மாமனிதன். சீனு ராமசாமி இயக்கியுள்ளார். இதில், குரு சோமசுந்தரம், ஷாஜி சென் உட்பட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ் சார்பில் தயாரித்துள்ளார்.
அன்பை இப்படித்தான் பரிமாறுவாங்களாம்.. விஜய் சேதுபதியை வேற லெவலில் வரவேற்கும் விக்னேஷ் சிவன்!
அபிராமி நிறுவனம்
இசை அமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்து அவரே இசை அமைத்துள்ளார். இதன் ஷூட்டிங், கடந்த 2019-ம் ஆண்டுடன் முடிவடைந்து விட்டது. இந்நிலையில், இந்த படத்தை வெளியிட தடை கோரி அபிராமி மால் நிறுவனத்தின் சார்பில் அதன் தலைமை செயல் அதிகாரி சீனிவாசன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
விநியோக உரிமை
அவர் தாக்கல் செய்த மனுவில், 'மாமனிதன்' திரைப்படத்தின் சென்னை விநியோக உரிமையை கிளாப் என்ற நிறுவனத்திடம் வாங்கியதாகவும், விநியோக உரிமையைத் தங்களுக்கு வழங்காததால் படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.
இடைக்காலத் தடை
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மாமனிதன் படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்தது. இந்த தடையை நீக்கக் கோரி, யுவன் சங்கர் ராஜாவின் ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ் நிறுவனம் பதில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு நேற்று வந்தது.
வான்சன் மூவிஸ்
ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அபிராமி மால் நிறுவனத்திற்கும் தயாரிப்பு நிறுவனமான ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ் நிறுவனத்திற்கும் இடையே எந்த ஒப்பந்தமும் போடப்படவில்லை. ஏற்கனவே, எங்களுடன் ஒப்பந்தம் செய்தது வான்சன் மூவிஸ் நிறுவனம்தான்.
தடை நீக்கம்
எனவே, ஒப்பந்தப்படி அந்த நிறுவனம் பணத்தை தராததால் ஒப்பந்தம் முடிக்கப்பட்டுவிட்டது. எனவே, படத்துக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட வேண்டும் என்றார். வழக்கை விசாரித்த நீதிபதி, மாமனிதன் படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டார்.