Don't Miss!
- News ஸ்மோக் பிஸ்கட் ரொம்ப ஆபத்து.. உணவில் திரவ நைட்ரஜன் கலந்து விற்றால் நடவடிக்கை! தமிழக அரசு வார்னிங்
- Sports 27 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட இல்லை.. பொறுப்பே இல்லை.. இதுதான் அதிரடி பேட்டிங்கா விராட் கோலி!
- Lifestyle ஜப்பான் பெண்கள் நீண்ட காலம் இளமையாகவும், அழகாகவும் இருக்க இந்த 4 ரகசிய உணவுகள்தான் காரணமாம்...!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
விநியோகப் பிரச்னை.. நடிகர் விஜய் சேதுபதி படத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்.. நீதிமன்றம் உத்தரவு
சென்னை: விஜய் சேதுபதியின் மாமனிதன் படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை நீதிமன்றம் நீக்கியுள்ளது.
விஜய் சேதுபதி, காயத்ரி நடித்துள்ள படம் மாமனிதன். சீனு ராமசாமி இயக்கியுள்ளார். இதில், குரு சோமசுந்தரம், ஷாஜி சென் உட்பட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ் சார்பில் தயாரித்துள்ளார்.
அன்பை இப்படித்தான் பரிமாறுவாங்களாம்.. விஜய் சேதுபதியை வேற லெவலில் வரவேற்கும் விக்னேஷ் சிவன்!
அபிராமி நிறுவனம்
இசை அமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்து அவரே இசை அமைத்துள்ளார். இதன் ஷூட்டிங், கடந்த 2019-ம் ஆண்டுடன் முடிவடைந்து விட்டது. இந்நிலையில், இந்த படத்தை வெளியிட தடை கோரி அபிராமி மால் நிறுவனத்தின் சார்பில் அதன் தலைமை செயல் அதிகாரி சீனிவாசன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
விநியோக உரிமை
அவர் தாக்கல் செய்த மனுவில், 'மாமனிதன்' திரைப்படத்தின் சென்னை விநியோக உரிமையை கிளாப் என்ற நிறுவனத்திடம் வாங்கியதாகவும், விநியோக உரிமையைத் தங்களுக்கு வழங்காததால் படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.
இடைக்காலத் தடை
வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மாமனிதன் படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்தது. இந்த தடையை நீக்கக் கோரி, யுவன் சங்கர் ராஜாவின் ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ் நிறுவனம் பதில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு நேற்று வந்தது.
வான்சன் மூவிஸ்
ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அபிராமி மால் நிறுவனத்திற்கும் தயாரிப்பு நிறுவனமான ஒய்எஸ்ஆர் பிலிம்ஸ் நிறுவனத்திற்கும் இடையே எந்த ஒப்பந்தமும் போடப்படவில்லை. ஏற்கனவே, எங்களுடன் ஒப்பந்தம் செய்தது வான்சன் மூவிஸ் நிறுவனம்தான்.
தடை நீக்கம்
எனவே, ஒப்பந்தப்படி அந்த நிறுவனம் பணத்தை தராததால் ஒப்பந்தம் முடிக்கப்பட்டுவிட்டது. எனவே, படத்துக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட வேண்டும் என்றார். வழக்கை விசாரித்த நீதிபதி, மாமனிதன் படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டார்.