Don't Miss!
- Finance தூத்துக்குடி நிறுவனத்தை அலேக்கா வாங்கிய அதானி.. மாஸ்டர் பிளான் உடன் களமிறங்கிய கௌதம் அதானி..!!
- News செம ட்விஸ்ட்.. கடைசி நேரத்தில் சென்னையில் ஓட்டு போட குவிந்த மக்கள்.. வாக்கு சதவீதம் எகிறியது
- Lifestyle நீங்கள் குழந்தைகளுக்கு செர்லாக் உணவளிக்கிறீர்களா? இனி கவனமாக இருங்கள்..!
- Technology Airtel-னா சும்மாவா.. அம்பானியை ஓவர் டேக் செய்வீங்க போலயே.. ரூ.300 விலை வரம்பில் கிடைக்கும் பெஸ்ட் திட்டங்கள்..
- Sports LSG vs CSK : தோனி மாதிரி இல்லப்பா.. ரசிகர்கள் பேச்சை கேட்ட ருதுராஜ்.. சிஎஸ்கே அணியில் 2 மாற்றங்கள்!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
சர்கார் படத்திற்கு அதிகரிக்கும் நெருக்கடி... திட்டமிட்டப்படி ரிலீசாவதில் சிக்கல்!
சர்கார் திரைப்படத்தின் கதையும், செங்கோல் கதையும் ஒன்று தான் என தமிழ் திரைப்பட எழுத்தாளர் சங்கம் அறிவித்துள்ளது.
Recommended Video
சென்னை: சர்கார் திரைப்படத்தின் கதையும், செங்கோல் கதையும் ஒன்று தான் என தமிழ் திரைப்பட எழுத்தாளர் சங்கம் அறிவித்துள்ளதால் படத்திற்கு சிக்கல் அதிகரித்துள்ளது.
விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளிக்கு வெளிவரவிருக்கும் திரைப்படம் சர்கார். இப்படத்தின் கதை தன்னுடைய செங்கோல் படத்தின் கதையை திருடி உருவாக்கப்பட்டுள்ளது என உதவி இயக்குனர் வருண் ராஜேந்திரன் என்பவர் எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து அச்சங்கத்தின் தலைவர் கே.பாக்யராஜ், இரண்டு படங்களின் கதையையும் தீவிரமாக ஆய்வு செய்தார். மேலும் ஏ.ஆர்.முருகதாஸிடமும் விளக்கம் கேட்டார். அப்போது, நடிகர் சிவாஜி கணேசனுக்கு ஒருமுறை நேர்ந்த தேர்தல் அனுபவத்தை வைத்தே இப்படத்தை உருவாக்கியதாக முருகதாஸ் கூறினார்.
ஆனால் இதனை ஏற்க எழுத்தாளர் சங்கம் மறுத்துவிட்டது. செங்கோல் திரைப்படத்தின் கதையும், சர்கார் திரைப்படத்தின் கதையும் ஒன்று தான் எனக்கூறி வருண் ராஜேந்திரனுக்கு எழுத்தாளர் சங்கம் கடிதம் அளித்தது. இந்த கடிதத்தின் சில பக்கங்கள் சமூக வலைதளங்களில் நேற்று வைரலாக பரவின.
அந்த கடிதத்தின் நகல் உண்மையானது தான் என இயக்குனர் கே.பாக்யராஜும் உறுதி செய்தார். ஏற்கனவே சர்கார் படத்திற்கு தடைகோரி வருண் ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில், எழுத்தாளர் சங்கத்தின் உறுதியான நடவடிக்கை, நெருக்கடியை மேலும் அதிகரித்துள்ளது. இதனால் சர்கார் திரைப்படம் திட்டமிட்டப்படி வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.