Just In
- 4 hrs ago
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- 4 hrs ago
லைகா தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் டான்.. வெளியானது சூப்பர் அப்டேட்!
- 5 hrs ago
சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி‘ … வெளியானது மிரட்டலான முன்னோட்ட காட்சி!
- 5 hrs ago
குப்புறப்படுத்து தீவிர யோசனை.. என்ன ஆச்சு குமுதா.. ஏன் இவ்வளோ சோகம் !
Don't Miss!
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Automobiles
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Lifestyle
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சர்கார் படத்திற்கு அதிகரிக்கும் நெருக்கடி... திட்டமிட்டப்படி ரிலீசாவதில் சிக்கல்!

சென்னை: சர்கார் திரைப்படத்தின் கதையும், செங்கோல் கதையும் ஒன்று தான் என தமிழ் திரைப்பட எழுத்தாளர் சங்கம் அறிவித்துள்ளதால் படத்திற்கு சிக்கல் அதிகரித்துள்ளது.
விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளிக்கு வெளிவரவிருக்கும் திரைப்படம் சர்கார். இப்படத்தின் கதை தன்னுடைய செங்கோல் படத்தின் கதையை திருடி உருவாக்கப்பட்டுள்ளது என உதவி இயக்குனர் வருண் ராஜேந்திரன் என்பவர் எழுத்தாளர் சங்கத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து அச்சங்கத்தின் தலைவர் கே.பாக்யராஜ், இரண்டு படங்களின் கதையையும் தீவிரமாக ஆய்வு செய்தார். மேலும் ஏ.ஆர்.முருகதாஸிடமும் விளக்கம் கேட்டார். அப்போது, நடிகர் சிவாஜி கணேசனுக்கு ஒருமுறை நேர்ந்த தேர்தல் அனுபவத்தை வைத்தே இப்படத்தை உருவாக்கியதாக முருகதாஸ் கூறினார்.
ஆனால் இதனை ஏற்க எழுத்தாளர் சங்கம் மறுத்துவிட்டது. செங்கோல் திரைப்படத்தின் கதையும், சர்கார் திரைப்படத்தின் கதையும் ஒன்று தான் எனக்கூறி வருண் ராஜேந்திரனுக்கு எழுத்தாளர் சங்கம் கடிதம் அளித்தது. இந்த கடிதத்தின் சில பக்கங்கள் சமூக வலைதளங்களில் நேற்று வைரலாக பரவின.
அந்த கடிதத்தின் நகல் உண்மையானது தான் என இயக்குனர் கே.பாக்யராஜும் உறுதி செய்தார். ஏற்கனவே சர்கார் படத்திற்கு தடைகோரி வருண் ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள நிலையில், எழுத்தாளர் சங்கத்தின் உறுதியான நடவடிக்கை, நெருக்கடியை மேலும் அதிகரித்துள்ளது. இதனால் சர்கார் திரைப்படம் திட்டமிட்டப்படி வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.