Don't Miss!
- News
மருமகள் மீது மாமனாருக்கு "காதல்.." 42 வயது வித்தியாசத்தை தாண்டி திருமணம்! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்
- Finance
ஏர் இந்தியா ஒரு வருட வெற்றி.. 500 புதிய விமானம்.. மாபெரும் அறிவிப்பு.. இனி தொடர் ஏறுமுகம் தான்..!
- Lifestyle
உங்க ராசிப்படி காதலில் நீங்கள் எந்த விஷயத்தில் சொதப்புவீங்களாம் தெரியுமா? உடனே கரெக்ட் பண்ணிக்கோங்க!
- Technology
Mars: செவ்வாய் கிரகத்தில் செல்பி! புகைப்படத்தை வெளியிட்டு அசத்திய நாசா! போட்டிக்கு நீங்களும் வரலாம்!
- Automobiles
இன்னும் என்ன யோசனை... ரொம்ப நாளாக எதிர்பார்த்த டீசல் டொயோட்டாவிற்கான புக்கிங் மீண்டும் தொடங்கியிருக்கு!
- Sports
கோலிவுட்டில் கால்பதித்தார் தோனி.. முதல் தயாரிப்பின் அறிவிப்பு வெளியானது.. நடிகர்கள் யார் தெரியுமா??
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
க்ரைம் திரில்லர் படம் இயக்க மிஷ்கினுக்கு உயர் நீதிமன்றம் தடை... உதயநிதியின் சைக்கோவுக்கு சிக்கல்!
சென்னை: க்ரைம் த்ரில்லர் திரைப்படத்தை இயக்கி வெளியிட இயக்குனர் மிஷ்கினுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சினிமா பைனான்சியர் ரகுநந்தன் தன் மகன் ஷியாமை வைத்து க்ரைம் த்ரில்லர் படம் எடுக்க இயக்குனர் மிஷ்கினுடன் 2015-ம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டார். இதற்காக, இயக்குனர் மிஷ்கினுக்கு 1 கோடி ரூபாய் முன்பணம் வழங்கப்பட்டது.

ஒப்பந்தப்படி 2016 ஏப்ரலில் படம் வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், அதே கதையை பயன்படுத்தி வேறு படம் எடுத்து வருவதாகவும், இதனால் இப்படத்திற்கு தடை விதிக்க கோரியும் பைனான்சியர் ரகுநந்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் மனுதாரரிடம் செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள கதையின் அடிப்படையில், வேறு திரைப்படத்தை இயக்கி வெளியிட இயக்குனர் மிஷ்கினுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.