Don't Miss!
- News புறம்போக்கு நிலம்.. நத்தம் இருக்கட்டும்.. புறம்போக்கு நிலத்திற்கு பட்டா வாங்கலாமா? அரசு சொல்வது என்ன
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
க்ரைம் திரில்லர் படம் இயக்க மிஷ்கினுக்கு உயர் நீதிமன்றம் தடை... உதயநிதியின் சைக்கோவுக்கு சிக்கல்!
க்ரைம் திரில்லர் படம் இயக்க மிஷ்கினுக்கு உயர் நீதிமன்றம் தடை.விதித்துள்ளது.
சென்னை: க்ரைம் த்ரில்லர் திரைப்படத்தை இயக்கி வெளியிட இயக்குனர் மிஷ்கினுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சினிமா பைனான்சியர் ரகுநந்தன் தன் மகன் ஷியாமை வைத்து க்ரைம் த்ரில்லர் படம் எடுக்க இயக்குனர் மிஷ்கினுடன் 2015-ம் ஆண்டு ஒப்பந்தம் மேற்கொண்டார். இதற்காக, இயக்குனர் மிஷ்கினுக்கு 1 கோடி ரூபாய் முன்பணம் வழங்கப்பட்டது.
ஒப்பந்தப்படி 2016 ஏப்ரலில் படம் வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், அதே கதையை பயன்படுத்தி வேறு படம் எடுத்து வருவதாகவும், இதனால் இப்படத்திற்கு தடை விதிக்க கோரியும் பைனான்சியர் ரகுநந்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் மனுதாரரிடம் செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள கதையின் அடிப்படையில், வேறு திரைப்படத்தை இயக்கி வெளியிட இயக்குனர் மிஷ்கினுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.