Don't Miss!
- News டார்க்கெட் திமுக.. தமிழக பாஜக தொண்டர்களுடன் கலந்துரையாடும் பிரதமர் மோடி! ‛மாஸ்டர் பிளான்’
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
கணவனுடன் மனைவிகள் டான்ஸ் ஆடுவது தப்பு.. பாலிவுட் படத்துக்கு இந்து அமைப்பு எதிர்ப்பு!
மும்பை: ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா நடிப்பில் உருவாகியிருக்கும் 'பாஜிரோ மஸ்தானி' திரைப்படத்தில் வரும் பாடல் காட்சிக்கு இந்து அமைப்பு ஒன்று எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஹிந்தி திரைப்படம் பாஜிரோ மஸ்தானி. ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, பிரியங்கா நடித்திருக்கும் இப்படம் வரலாற்றுப் பின்னணியில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இதில் ரன்வீர் சிங்கின் முதல் மனைவியாக பிரியங்கா சோப்ராவும், 2 வது மனைவியாக தீபிகா
படுகோனேவும் நடித்திருக்கின்றனர். டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் இப்படத்திற்கு தற்போது இந்து ஜனஜாக்ருதி என்ற இந்து அமைப்பு அச்சுறுத்தல் விடுத்திருக்கிறது.
இந்து ஜன ஜாக்ருதி அமைப்பை சேர்ந்த ரமேஷ் ஷிண்டே கூறுகையில், "இந்தப் படத்தில் ரன்வீர் சிங் நடித்துள்ள கதாப்பாத்திரத்தின் மனைவியாக வரும் மஸ்தானி மற்றும் காசிபாய் ஆகிய இருவரும் தங்கள் கணவருடன் இணைந்து ஆடிப் பாடுகின்றனர்.
ஆனால் பீஷ்வாக்களின் காலத்தில் பெண்கள் தங்கள் குடும்ப அமைப்புகளுக்கு மிகவும் கட்டுப்பட்டு
இருந்தனர். இப்படி கணவரோடு ஆடிப்பாடும் பழக்கம் கிடையாது. இந்தப் படம் வரலாற்றுக்கு மாறாக இருக்கிறது அதனால் நாங்கள் இந்தப் படத்திற்கு எதிராக போராட்டம் நடத்துவோம்" என்று கூறினார்.