Don't Miss!
- News "பேசுவதை எல்லாம் ஒட்டு கேக்குறாங்க.. இதனால நான் செல்போனை யூஸ் பண்றதே இல்லை.." ஹெச்.ராஜா பகீர் புகார்
- Sports 4 பந்துகளில் 4 சிக்ஸ்.. டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த பட்டிதர்.. 19 பந்துகளில் மிரட்டல் அரைசதம்!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Lifestyle சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
இந்துக்கடவுள்களை அவமதிக்கிறார்.. விஜய் சேதுபதி மீது இந்து மக்கள் முன்னணி சென்னை கமிஷனரிடம் புகார்!
சென்னை: இந்துக் கடவுள்களை அவமதிப்பதாக நடிகர் விஜய் சேதுபதி மீது இந்து மக்கள் முன்னணி சார்பில் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
நடிகர் விஜய் சேதுபதி கடந்த சில நாட்களாக ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி தலைப்புச் செய்தியாகி வருகிறார். அந்த வகையில் இந்துக் கடவுள்கள் குறித்து பேசி மீண்டும் பிரச்சனையை இழுத்து விட்டுள்ளார்.
அண்மையில் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கிய விஜய் சேதுபதி, கோவில்களில் சாமி குளிப்பதை காட்டுவார்கள், ஆனால் உடை மாற்றுவதை காட்ட மாட்டார்கள் என்றார்.
மீனாவின் அம்மாவிடம் அப்படி கேட்ட ரஜினிகாந்த்.. 36 வருடங்களுக்குப் பிறகு நடிகை சொன்ன ரகசியம்!
உடை மாற்றுவது
கோவில்களில் அபிஷேகம் செய்வதை காட்டுவதையும் உடை மாற்றும் போது திரையிட்டு மறைப்பதையும் விமர்சிக்கும் வகையில், சிறுமி ஒருவர் தனது தாத்தாவிடம் கேட்டதாக ஒரு கதையை கூறினார் விஜய் சேதுபதி.
சர்ச்சையில்..
இந்நிலையில் இந்த விவகாரம் பூதாகரமாயிருக்கிறது. விஜய் சேதுபதி ஏற்கனவே ஒரு முறை மனிதனை காப்பாற்ற மனிதன் தான் வரவேண்டும் மேலிருந்து சாமி என்று ஒன்று வராது என கூறியிருந்தார். தற்போது மீண்டும் இந்துக் கடவுள்களுக்கு அபிஷேகம் செய்யப்படுவதையும் விமர்சித்து சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.
அவமதித்ததாக புகார்
ஏற்கனவே இந்த விவகாரம் குறித்து விஜய் சேதுபதி மீது திருச்சி போலீஸ் கமிஷனரிடம் நேற்று இந்து மகா சபா புகார் அளித்தது. கடவுள்களுக்கு செய்யப்படும் அபிஷேகத்தையும் ஆகம விதிகளையும் அவமதித்ததாக கூறி புகார் அளித்தனர்.
இந்து மக்கள் முன்னணி
இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி மீது இந்து மக்கள் முன்னணி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளனர். இந்துக் கடவுள்களை அவமதிப்பதாக கூறி சென்னை போலீஸ் கமிஷனரிடம் ஆன்லைனில் இந்து மக்கள் முன்னணி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.