Don't Miss!
- News தாமரைக்கு ஓட்டுபோட கூறிய மூதாட்டி.. விரலை மாத்தி அழுத்திய தேர்தல் அதிகாரி? எல் முருகன் வாக்குவாதம்
- Lifestyle 1 கப் பச்சரிசி மாவு வெச்சு.. இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ஒரு வாரத்துக்கு ஸ்நாக்ஸ் பிரச்சனையே வராது..
- Finance தங்கம் விக்கிற விலைக்கு 1000 கிலோ தங்கம் காணிக்கை.. திருப்பதி வெங்கடாஜலபதி மகிமையே மகிமை..!!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Sports "பிரேக் அப் பண்ணப் போறாங்க" அழகான பெண்ணை பார்த்து வாயை பிளந்த சுப்மன் கில்.. வெளியான வீடியோ
- Technology பொளந்து கட்டுது சேல்.. ரூ.20499 பட்ஜெட்ல 108MP கேமரா.. 3D டிஸ்பிளே.. 5800mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பிரமாண்ட இயக்குனரை செருப்பால் அடித்தால் ரூ.10,000 பரிசு: பாஜக தலைவர்
போபால்: பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியை செருப்பால் அடிப்பவருக்கு ரூ.10 ஆயிரம் பரிசு அளிக்கப்படும் என பாஜக தலைவர் அகிலேஷ் கந்தெல்வால் அறிவித்துள்ளார்.
பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஷாஹித் கபூர், அதிதி ராவ் ஹைதரி உள்ளிட்டோரை வைத்து வரலாற்று படமான பத்மாவதியை இயக்கி வருகிறார்.
ராணி பத்மாவதியை மையமாக வைத்து கதை நகர்கிறது.
தாக்குதல்
படப்பிடிப்பு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடந்தபோது ராணி பத்மாவதி பற்றிய வரலாற்றை தவறாக சித்தரிப்பதாகக் கூறி கர்னி சேனா அமைப்பினர் படப்பிடிப்பு தளத்தை சேதப்படுத்தினர்.மேலும் பன்சாலியையும் தாக்கினர்.
பாலிவுட்
பன்சாலி படப்பிடிப்பு தளத்தில் தாக்கப்பட்டது குறித்து அறிந்து பாலிவுட்காரர்கள் கொந்தளித்துள்ளனர். நம் நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது, வன்முறை எதற்கும் தீர்வாகாது என்று பாலிவுட் பிரபலங்கள் தெரிவித்துள்ளனர்.
பரிசு
சஞ்சய் லீலா பன்சாலியை செருப்பால் அடிப்பவருக்கு ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்று மத்திய பிரதேச மாநில பாஜக தலைவர் அகிலேஷ் கந்தெல்வால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பத்மாவதி
பத்மாவதி இந்து ராணி என்பதால் அவரை பற்றிய வரலாற்று தகவல்களை பன்சாலி மாற்றிவிட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் படத்தின் தலைப்பை மாற்றவும் பன்சாலியிடம் கர்னி சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.