Don't Miss!
- Finance மோனாலிசா ஓவியத்தை பாட வைத்த மைக்ரோசாப்ட் ஏஐ vasa -1.. அசரவைக்கும் வீடியோ..!
- News பாஜகவிற்கு தோல்வி பயம் வந்துவிட்டது.. மோடி எடுத்த இறுதி அஸ்திரம்.. புட்டு புட்டு வச்சிட்டாரே.. போச்சு
- Sports முத்துப்பாண்டிய அவன் கோட்டைலயே அடிச்சிட்டாங்க.. சிஎஸ்கேவை பொளக்கும் ரசிகர்கள்.. வெறித்தன மீம்ஸ்!
- Lifestyle ஒருடைம் உருளைக்கிழங்கு குருமாவை இந்த ஸ்டைலில் செய்யுங்க.. அப்புறம் பாருங்க இப்படிதான் எப்பவும் செய்வீங்க..
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பிரமாண்ட இயக்குனரை செருப்பால் அடித்தால் ரூ.10,000 பரிசு: பாஜக தலைவர்
போபால்: பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியை செருப்பால் அடிப்பவருக்கு ரூ.10 ஆயிரம் பரிசு அளிக்கப்படும் என பாஜக தலைவர் அகிலேஷ் கந்தெல்வால் அறிவித்துள்ளார்.
பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், ஷாஹித் கபூர், அதிதி ராவ் ஹைதரி உள்ளிட்டோரை வைத்து வரலாற்று படமான பத்மாவதியை இயக்கி வருகிறார்.
ராணி பத்மாவதியை மையமாக வைத்து கதை நகர்கிறது.
தாக்குதல்
படப்பிடிப்பு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடந்தபோது ராணி பத்மாவதி பற்றிய வரலாற்றை தவறாக சித்தரிப்பதாகக் கூறி கர்னி சேனா அமைப்பினர் படப்பிடிப்பு தளத்தை சேதப்படுத்தினர்.மேலும் பன்சாலியையும் தாக்கினர்.
பாலிவுட்
பன்சாலி படப்பிடிப்பு தளத்தில் தாக்கப்பட்டது குறித்து அறிந்து பாலிவுட்காரர்கள் கொந்தளித்துள்ளனர். நம் நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது, வன்முறை எதற்கும் தீர்வாகாது என்று பாலிவுட் பிரபலங்கள் தெரிவித்துள்ளனர்.
பரிசு
சஞ்சய் லீலா பன்சாலியை செருப்பால் அடிப்பவருக்கு ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என்று மத்திய பிரதேச மாநில பாஜக தலைவர் அகிலேஷ் கந்தெல்வால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பத்மாவதி
பத்மாவதி இந்து ராணி என்பதால் அவரை பற்றிய வரலாற்று தகவல்களை பன்சாலி மாற்றிவிட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் படத்தின் தலைப்பை மாற்றவும் பன்சாலியிடம் கர்னி சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.