Don't Miss!
- Technology ஏர்டெல் காலி.. மாதாந்திரம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. 5ஜி டேட்டா.. அன்லிமிட் வாய்ஸ் கால்கள்!
- News "வேட்புமனு தாக்கல் போதே குழப்பம் இருந்தது.." வெடித்த சர்ச்சைக்கு.. அண்ணாமலை தந்த பரபர விளக்கம்!
- Sports எழுதி வச்சிக்கோங்க! ஆளே மாறிட்டான்..நிச்சயம் பெரிய ஆளா வருவான்.. 22 வயது வீரரை பாராட்டிய சூர்யகுமார்
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- Finance ஐஐஎம் பெங்களூரு: 516 பேருக்கு வேலை, சாராசரி சம்பளமே ரூ.32.5 லட்சமாம்..!
- Automobiles இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
சேலையில் சாமி படம்... குஷ்பு வீட்டை முற்றுகையிட்ட இந்து மக்கள் கட்சி
சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த சினிமா இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட குஷ்பு, சாமி படம் போட்ட சேலையை அணிந்திருந்தார். இந்துக்கள் மதிக்கும் கடவுள்கள் படங்களைப் போட்ட சேலையை மார்பில் அணிந்து வந்து இந்துக்களை இழிவுபடுத்தி விட்டார் குஷ்பு என உடனடியாக எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன.
இந்த நிலையில் சென்னையில் உள்ள குஷ்புவின் வீட்டை முற்றுகையிட்டு இந்து மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்த முயன்றனர். அவர்களைப் போலீஸார் தடுத்து நிறுத்திக் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
ஆனால் தங்களது போராட்டம் நிற்காது என்றும், குஷ்பு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் பெரும் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர்கள் எச்சரித்தனர். ஆனால் வேலையில்லாத வெட்டிப் பயல்கள்தான் இப்படி எதிர்ப்புக் குரல் எழுப்புகிறார்கள் என்ற ரீதியில் ஏற்கனவே இந்த விவகாரம் குறித்து குஷ்பு கருத்து தெரிவித்து விட்டார் என்பது நினைவிருக்கலாம்.