திரைத்துறையில் மூவாயிரம் கோடி முதலீடு செய்யும் ஹோம்பாலே பிலிம்ஸ்
'கேஜிஎஃப் 1', 'கே ஜி எஃப் 2', 'காந்தாரா' போன்ற பிரம்மாண்டமான பட்ஜெட் படங்களை தயாரித்து, பான் இந்திய படைப்பாக அளித்து, ரசிகர்களின் மனதில் இடம்பிடித்திருக்கும் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பாலே பிலிம்ஸ் சார்பில் அதன் உரிமையாளரான தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர், பார்வையாளர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்து, எதிர்கால திட்டம் குறித்த அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், அடுத்து வரும் 5 ஆண்டுகளில் மூவாயிரம் கோடி ரூபாயை முதலியிடு செய்யப்போவதாக தெரிவித்துள்ளார்.
ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தற்போது பிரபாஸ் மற்றும் ஸ்ருதிஹாசன் நடிப்பில், இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் 'சலார்' எனும் திரைப்படத்தையும், தமிழில் கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் 'ரகு தாத்தா' என்ற படத்தையும், இயக்குநரும், நடிகருமான பிரித்விராஜ் சுகுமாறன் இயக்கத்தில் 'டைசன்' எனும் திரைப்படத்தையும், ரக்ஷித் ஷெட்டி இயக்கத்தில் 'ரிச்சர்ட் ஆண்டனி' எனும் திரைப்படத்தையும் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











