Don't Miss!
- News மக்களை ஒருமையில் பேசிய தேர்தல் அதிகாரி.. அதிரடி காட்டிய நெல்லை கலெக்டர்..வெளியே தள்ளிய போலீஸ்
- Lifestyle சனிக்கிழமையன்று இந்த கலர் ஆடைகளை அணியக் கூடாது..ஏன் தெரியுமா?
- Automobiles மின்சாரத்தில் இயங்கும் ஆக்டிவாவை ஹோண்டா எப்போ தயாரிக்கும்னு கேட்டுட்டே இருந்தீங்களே.. இதோ அந்த தகவல்!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Sports IPL 2024 : ருதுராஜ் செய்த தவறு.. தவித்துப் போன சிஎஸ்கே.. LSG vs CSK போட்டியில் என்ன நடந்தது?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
கண்களால் பலாத்காரம் செய்தேனா?: நடிகை மீது தொழில் அதிபர் வழக்கு
டெல்லி: பாலிவுட் நடிகை இஷா குப்தா மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார் டெல்லியை சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் ஒருவர்.
பாலிவுட் நடிகை இஷா குப்தா டெல்லியில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு சாப்பிட சென்றபோது அதன் உரிமையாளர் தன்னை கண்களால் பலாத்காரம் செய்ததாக ட்விட்டரில் தெரிவித்தார்.
மேலும் ஹோட்டல் உரிமையாளரின் பெயர், புகைப்படத்தை வெளியிட்டு இது தான் அவர் லட்சணம் என்று விளாசினார். ஒரு நடிகையான தனக்கே இப்படி என்றால் சாதாரண பெண்களின் நிலையை பற்றி கேட்கவா வேண்டும் என்று இஷா கூறினார்.
அவரின் ட்வீட்டுகளை பார்த்த நெட்டிசன்கள் அந்த ஹோட்டல் உரிமையாளரை கேவலமாக விமர்சித்தார்கள். இந்நிலையில் அந்த ஹோட்டல் உரிமையாளர் இஷா குப்தா மீது டெல்லி சகேத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தனது மனுவில் கூறியிருப்பதாவது,
நடிகை இஷா குப்தா புகாரை அடுத்து நெருங்கிய நண்பர்களும், சக ஊழியர்களும் என்னையும், என் குடும்பத்தாரையும் தொடர்பு கொண்டு அதிருப்தி தெரிவித்தனர். இதனால் நாங்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். பொய்யான புகாரை நம்பி என் கேரக்டர் பற்றி தவறாக பேசுகிறார்கள். பொய் புகார் அளித்த நடிகை தண்டிக்கப்பட வேண்டும். மேலும் எனக்கு நஷ்டஈடு அளிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு வரும் ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
உணவகத்தில் தன்னை வைத்த கண் வாங்காமல் பார்த்தது யார் என்று இஷா குப்தாவுக்கு முதலில் தெரியவில்லை. அவரை யாருக்காவது தெரியுமா என்று இஷா சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்ப ரசிகர்கள் தான் கண்டுபிடித்து கூறினார்கள். நான் ஒரு நடிகை என்பதால் துணிந்து புகார் அளிக்கவில்லை. ஒரு பெண்ணாக புகார் அளிக்கிறேன். நாம் பாதுகாப்பாகத் தான் உள்ளோமா?. பெண்ணாக பிறப்பதே ஒரு சாபமா என்று இஷா குப்தா கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.