Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
50வது நாளில் பிக்பாஸ்.. ஹவுஸ்மேட்ஸ் பங்களிப்பு என்ன? ஒரு நிமிடத்திற்குள் சொல்ல சொன்ன கமல்!
சென்னை: பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தொடங்கி 50 நாட்கள் ஆன நிலையில் ஹவுஸ்மேட்ஸ் தங்களின் பங்களிப்பு குறித்து பகிர்ந்து கொண்டனர்.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் இன்று பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இன்று 50வது நாளை எட்டியுள்ளது.
இதனை முன்னிட்டு அட்டகாசமான உடையில் இன்று தோன்றினார் கமல். நிகழ்ச்சிக்கு முன்னதாக பிக்பாஸ் ரசிகர்களையும், சுற்றுச்சூழல் ஆர்வலர் பத்மரியாவையும் வீடியோ மூலம் சந்தித்து பேசினார்.
பாலாஜி மூடிக்கிட்டு அப்பவே ஜெயிலுக்கு போயிருக்கணும்.. வேற லெவலில் வெளுத்து வாங்கிய ஜித்தன் ரமேஷ்!
பிஸ்கட் கதை
பின்னார் பேசிய நிஷா தன்னுடைய 50 நாள் பங்களிப்பாக எல்லோரையும் எண்டெர்டெயின் பண்ணியிருக்கேன். சமையல் உட்பட எல்லா வேலையும் செய்திருக்கேன் என்றார். மேலும் சுகி சிவம் கூறிய பிஸ்கட் கதையை கூறிய நிஷா அதன் எல்லாருக்கும் கொடுத்து சாப்பிடனும் என்பதை செய்கிறேன் என்றார்.
டான்ஸ் ஆடினேன்
கேபி பேசிய போது ஆடியன்ஸ்க்கு என்னை பற்றி தெரிய எல்லா டாஸ்க்குகளிலும் பங்கேற்று என்னுடைய பெஸ்ட் கொடுக்றேன். நான் டான்ஸ் ஆடுவது மக்களுக்கு தெரியப்படுத்தியிருக்கேன். இதை எனக்கான வாய்ப்பாக பயன்படுத்தி வருகிறேன் என்றார்.
நேர்மையாக விளையாடுவேன்
தொடந்து பேசிய ஆரி பிக்பாஸ் நிகழ்ச்சியில் 100 நாள் தங்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதில் ஒவ்வோரு நிமிடத்தையும் நேர்மையாக விளையாடுகிறேன். மக்களுக்கு தேவையான விஷயங்களை சொல்லுவேன் என மிகச்சுறுக்கமாக முடித்துக் கொண்ட ஆரி கமலின் பாராட்டை பெற்றார்.
மரியாதை கூடியுள்ளது
அவரை தொடர்ந்து பேசிய சுச்சி, நிறைய பாடல்கள் பாடியிருக்கேன், எழுதிருயிக்கேன். இங்கு நல்ல ஃபிரண்ட்ஷிப் கிடைத்திருக்கு. எனக்கு குத்தப்பட்ட முத்திரைகளை வைத்து பல பாடல்களை எழுதியிருக்கேன். டாஸ்க்குகளை செய்திருக்கேன். இங்குள்ள கேமரா மேன்களுக்கு புரூஸ் என பெயர் வைத்து என் உணர்வுகளை பகிர்ந்துள்ளேன். என்மேல் எனக்கு மரியாதை கூடியுள்ளது என்றார்.