Don't Miss!
- Sports PBKS vs MI : என்னா அடி.. பீதியை கொடுத்திட்ட தம்பி.. அஷுதோஷ் சர்மாவை நேரடியாக பாராட்டிய அம்பானி மகன்!
- News ஜனநாயக கடமை ஆற்ற முதல் ஆளாக வந்த நடிகர் அஜித்.. 30 நிமிடம் முன்பே வந்து காத்திருந்து ஓட்டு போட்டார்!
- Technology யாரு சாமி நீ.. UPI.. யூடியூப்.. சிங்கிள் சார்ஜில் 6 நாட்கள் பேட்டரி.. புதிய 4ஜி போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
அண்ணாச்சியை விடாத இசைவாணி.. நீ ரொம்பவே மாறிட்ட என குற்றச்சாட்டுகளை அடுக்கும் ஹவுஸ்மேட்ஸ்!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் 25ம் நாளுக்கான முதல் புரமோ வெளியாகி வைரலாகி வருகிறது.
நெருப்பு வாரம் என்பதால் வரும் எல்லா புரமோவிலும் இசைவாணியை காட்டி வருகின்றனர்.
ஜிவி பிரகாஷின் ஆக்ஷன், ரொமான்ஸ் காட்சிகளுடன்.. ஜெயில் டீசர் ரிலீஸ் !
எப்படி அதிகாரம் செய்வது என்கிற குழப்பத்தோடு இருக்கும் இசைவாணியை தாமரை செல்வி, மதுமிதா உள்ளிட்ட ஹவுஸ்மேட்கள் நீ மாறிட்ட என விளாசும் புரமோ வெளியாகி உள்ளது.
நெருப்பு வாரம்
கையில் நெருப்பு சக்தியே கிடைத்திருந்தும் அதை சரியான விதத்தில் பயன்படுத்தி வேற லெவல் கேம் ஆடியிருக்கலாம் இந்த வாரம் இசைவாணி. ஆனால், இன்னமும் மற்றவர்களிடம் பேச தயங்கிக் கொண்டு அதிகாரம் பண்ணாமல் கெஞ்சிக் கொண்டு இருக்கிறார்.
ஃபயர் இல்லை
கானா பாடகியான இசைவாணி சும்மா ரவுண்டு கட்டி கேம் ஆடி கலக்குவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு அவரிடம் அந்தளவுக்கு ஃபயர் இல்லாமல் இருப்பதை பார்த்து அப்செட் ஆகி வருகின்றனர். ஏதாவது பேசினால் பிரச்சனையாகி விடுமோ அடுத்தவர் மனம் கஷ்டப்பட்டு விடுமோ என்றே பேச வருவதை தயக்கத்துடனே பேசி வருகிறார்.
அதுவே பிடிக்கவில்லை
சர்வாதிகாரி டாஸ்க்கின் போது ஐஸ்வர்யா தத்தா இறங்கி ஆடிய கேம் தான் இன்னமும் ஹைலைட்டாக இருக்கிறது. ஆனால், சாஃப்ட்டாக ஹேண்டில் பண்ணும் இசைவாணியின் பேச்சே தாமரை செல்வி, இந்த வார தலைவி மதுமிதா உள்ளிட்ட போட்டியாளர்களுக்கு பிடிக்கவில்லை என்பது இன்றைய முதல் புரமோ மூலம் தெளிவாக தெரிகிறது.
பழையபடி இல்லை
பவர் கிடைத்ததும் நீ பழையபடி பாசத்தை காட்டவில்லை மாறிட்ட என தாமரை செல்வி சொல்வதும் தண்டனை கொடுத்ததற்காக மதுமிதா முதல் முதலாக இசையை எதிர்த்து வாய் திறந்து பேசுவதும் முதல் புரமோவில் இடம்பெற்றுள்ளன. எத்தனை முறை மீட்டிங் வைத்து இசை கெஞ்சினாலும் யாரும் அவர் சொல்பேச்சை கேட்பது போலவே தெரிவதில்லை.
அண்ணாச்சியை விட மாட்டார் போல
இசைவாணிக்கும் இமான் அண்ணாச்சிக்கும் ஆரம்பத்தில் இருந்தே ஆகவில்லை. மற்ற போட்டியாளர்கள் இசை பேச்சை கேட்கவில்லை என்றாலும், அவர்களை எல்லாம் விட்டு விட்டு அண்ணாச்சி மட்டும் என் பேச்சை கேட்கவில்லை என புலம்பி வருகிறார். இப்படி விளையாண்டு கொண்டிருந்தால் சீக்கிரம் வெளியே வர வேண்டியதுதான் என்கின்றனர் நெட்டிசன்கள்.
வருண் என்ன பண்ண போறாரோ
நெருப்பு காயினை வைத்த பிறகு தான் சமைக்கவே ஆரம்பிக்க வேண்டும் என இசை ரூல்ஸ் போட்டுள்ள நிலையில், மற்ற காயின்களை விட நீர் காயினை வைத்திருக்கும் வருண் நான் காயின் வைத்த பிறகு தான் மத்தவங்க பாத்ரூம் போகணும்னு சொன்னா என்ன நடக்குமோ என்பதை தான் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
-
விர்ஜினிட்டியை எப்போ இழந்த?.. மகனை பார்த்து கேட்குற கேள்வியா இது மலைகா அரோரா.. தீயாக பரவும் வீடியோ!
-
துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?