Don't Miss!
- Finance மியூச்சுவல் ஃபண்ட்களில் முதலீடு செய்ய சரியான நேரம் எது? இதை நோட் பண்ணிக்கோங்க!
- Automobiles இந்த காரை எத்தன பேரு தங்களுக்கு பிடிச்சவங்களுக்கு பரிசா கொடுக்க போறாங்களோ! அஸ்டன் மார்ட்டின் வேன்டேஜ் அறிமுகம்
- Lifestyle 300 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட முகலாயர்கள் அவங்க ஆட்சியில் இந்தியாவின் எந்தெந்த விஷயங்களை மாற்றினார்கள் தெரியுமா?
- News பாதி உங்களுக்கு..மீதி எங்களுக்கு? டபுள் சிக்ஸ் அடித்த பாஜக! சாப்பிட்ரோ விஷயத்தை கை கழுவிய காங்கிரஸ்
- Technology ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பாலாஜி வடிவேலு பாலாஜி ஆன கதை.. எல்லாத்துக்கும் காரணம் அந்த சூப்பர் ஹிட் பாடல் தானாம்!
சென்னை: நகைச்சுவை நடிகர் வடிவேலு பாலாஜியின் திடீர் மரணம் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
2020ம் ஆண்டு சினிமா கலைஞர்களுக்கு ஒரு சாபக் கேடான ஆண்டாகவே மாறிவிட்டது.
ஏகப்பட்ட திரைத்துறையை சார்ந்தவர்கள், இளம் வயதிலேயே உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர் கதையாக நடந்து வருகிறது.
வடிவேலு பாலாஜி மரணம்.. 'கடவுள் மேல கொஞ்சம் வெறுப்பும் வருது..' ரோபோ சங்கர் உருக்கம்!
படிப்பு ஏறல
மதுரையை சேர்ந்த பாலாஜி, அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது படிப்பு ஏறாத காரணத்தால், படிப்பை பாதியிலே நிறுத்தி விட்டார். அதன் பிறகு என்ன செய்யப் போகிறோம் என தெரியாமல் தவித்து வந்த நிலையில், நடனத்தில் பாலாஜிக்கு ஈடுபாடு வரத் தொடங்கியது.
சின்ன சின்ன மேடைகளில்
நடன நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றும், சின்ன சின்ன மேடைகளில் ஏறியும் நடனமாடி வந்தார் பாலாஜி. அவரது நடனத் திறமையை பார்த்து பலரும் பாராட்டினார்கள், சினிமாவில் நடனக் கலைஞராக வர வேண்டும் என நினைத்த பாலாஜி எப்படி காமெடியன் வடிவேலு பாலாஜியாக மாறினார் என்பது க்யூட்டான ஒரு குட்டி ஸ்டோரி.
காதலன் பாடல் தந்த மாற்றம்
காதலன் படத்தில் பிரபலமான ஊர்வசி ஊர்வசி பாடலுக்கு மேடையில் ஆட வேண்டிய சூழ்நிலையில், பாலாஜியின் நண்பர் பிரபுதேவா ஆகவும், கருப்பாக இருப்பதால், வடிவேலு ஆக பாலாஜியையும் நடனமாட கூறியுள்ளனர். அதன் பிறகு, நமக்கு வடிவேலு பாடி லேங்குவேஜ் நல்லா வருதே என யோசித்த அவர், அதன் பிறகு வடிவேலு பாலாஜியாகவே மாறியுள்ளார்.
பாட்டியை கலாய்த்து
மேலும், வீட்டில் இருந்த தனது பாட்டியை பங்கமாக கலாய்த்து அடிக்கடி பாலாஜி காமெடி செய்வது வழக்கம். அவரது காமெடியை பார்த்த அவரது பாட்டி, அப்படியே வடிவேலு மாதிரியே பண்றியே டா என பாராட்டி உள்ளார். தொடர்ந்து உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் வடிவேலு போலவே நடித்து காட்டியும், வசனம் பேசியும் ஒத்திகை பார்த்து, எல்லாம் ஓகே ஆன பிறகு, வடிவேலு வேஷங்களை போட்டு நாடகங்களில் கலக்கினார். பின்னர், கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
சினிமாவில் பெரியாளாக வேண்டும்
வைகைப் புயல் வடிவேலுவை போலவே தானும், காமெடியில் கலக்கி சினிமாவில் பெரிய ஆளாக வரவேண்டும் என்ற ஆசை நடிகர் வடிவேலு பாலாஜிக்கு நிறையவே இருந்தது. ஆனால், கடை நிலை சினிமா கலைஞர்களின் வறுமை நிலை இவரையும் வாட்ட, சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல், உயிரிழந்த சோகம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.