Don't Miss!
- News தனி அறையில் நடந்த ஆலோசனை.. பாஜக கூட்டணியில் பாமக போட்டியிடும் 10 தொகுதிகள் எவை? வெளியான தகவல்
- Sports "ரோஹித் எனக்கு கீழ் ஆடுவது".. எல்லை மீறிவிட்டார் ஹர்திக் பாண்டியா.. ரசிகர்கள் கொந்தளிப்பு
- Finance 10 லட்சம் ரூபாய்க்கு கீழ் இந்தியாவில் கிடைக்கும் ஆட்டோமேட்டிக் கார்கள்
- Technology வாரித்தூக்குது ஆர்டர்.. ரூ.11,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
- Automobiles கொஞ்ச நேரத்துல உயிர் போய்ட்டு வந்துச்சு!! தப்பிக்க, பைக்கில் இதையெல்லாம் டிரை செய்து பாருங்க!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஆண்கள் கல்யாணத்துக்கு முன்னாடியே இந்த 6 விஷயங்களை அவசியம் தெரிஞ்சு வைச்சுக்கணுமாம்...!
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
இந்த முட்டாள்களுக்கு எப்படி சொல்லி புரிய வைப்பது?: கொந்தளிக்கும் இயக்குநர்
மும்பை: ப்ரீத்தி தான் முதலில் அறைந்தார் என்று முட்டாள்களுக்கு நான் எப்படி விளக்க முடியும் என கபிர் சிங் பட இயக்குநர் சந்தீப் வாங்கா ரெட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.
அர்ஜுன் ரெட்டி படத்தின் இந்தி ரீமேக்கான கபிர் சிங் படத்தில் ஷாஹித் கபூர் கியாரா அத்வானியை அறைந்த காட்சி உள்ளது. இந்நிலையில் பேட்டி அளித்த கபிர் சிங் பட இயக்குநர் சந்தீப் வாங்கா ரெட்டியோ, உண்மை காதலில் ஒருவரையொருவர் அறைய, தொட உரிமை இல்லை என்றால் அது என்ன காதல் என்று தெரிவித்தார்.
அவரின் பேட்டியை பார்த்த பல பெண்கள், பிரபலங்கள் அவரை விளாசிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இது குறித்து சந்தீப் வாங்கா ரெட்டி கூறியிருப்பதாவது,
நான் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டேன். நான் பேசியதில் சில பகுதிகளை நீக்கவிட்டார்கள். அதனால் நான் என்ன கூறினேன் என்பது மக்களுக்கு தெரியவில்லை. தவறான முறையில் அந்த பேட்டியை எடிட் செய்துள்ளனர். இதனால் ஒரு சில பெண்கள் என்னை தாக்கிப் பேசும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
நான் என் ஹீரோவின் மனநிலை குறைத்து தான் விளக்கிப் பேசினேன். கபிர் சிங் அல்லது அர்ஜுன் ரெட்டிக்கு வன்முறை மூலம் தான் காதலை வெளிப்படுத்த தெரியும். அது என் வழி அல்ல. அவர்கள் ஃபீல் பண்ணுவதும் நான் ஃபீல் பண்ணுவதும் ஒன்று அல்ல.
யாரையும் அறைய வேண்டும் என்று நான் எப்பொழுதுமே கூறியது இல்லை. காதலில் உண்மையாக இருக்க வேண்டும் என்று தான் கூறினேன். அந்த நேர்மை, உண்மை வன்முறை வடிவம் எடுக்கலாம். அது ஏன் கபிர் சிங் ப்ரீத்தியை அறைந்தது பற்றி மட்டும் பேசுகிறார்கள்?. ப்ரீத்தியும் தானே கபிரை அறைந்தார்?.
காதலை எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்பது அவர்களின் விருப்பம். அதை ஏன் சிலர் தேவையில்லாமல் விமர்சிக்கிறார்கள்?. கதாபாத்திரங்கள் நடந்து கொண்டதற்கு என்னையும் விமர்சிக்கிறார்கள். உண்மையான காதலில் உணர்ச்சிகள் வன்முறையாகவும் மாறலாம்.
நான் என் பார்ட்னரை அறைய மாட்டேன். ஆனால் என் காதல் உண்மை என்பதை எப்படியாவது புரிய வைப்பேன். படத்தில் ப்ரீத்தி தான் முதலில் அறைந்தார், பின்னரே கபிர் அறைந்தார். இதை முட்டாள்களுக்கு எப்படி விளக்குவது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.