Don't Miss!
- Sports CSK vs LSG : சிஎஸ்கே கேப்டனாக மாபெரும் சாதனை.. தோனியின் ரெக்கார்டை உடைத்து எறிந்த ருதுராஜ்
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Automobiles இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
போதைப் பொருள் வழக்கில் நடிகர், நடிகைகள் திடீர் என சிக்கியது எப்படி தெரியுமா?
ஹைதராபாத்: நடிகர் ரவி தேஜாவின் தம்பி பரத் சாலை விபத்தில் பலியானது குறித்த விசாரணையின்போது தான் போதைப் பொருள் கும்பல் சிக்கியதாம்.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஹைதராபாத்தில் நாசா என்ஜினியர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் போதைப் பொருள் பயன்படுத்தும் தெலுங்கு திரையுலகை சேர்ந்த 15 பேருக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
நடிகர்கள் ரவி தேஜா, நவ்தீப், தனிஷ், நடிகைகள் சார்மி, முமைத் கான் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நடிகர்கள்
போதைப் பொருள் வழக்கில் சிக்கியுள்ள நவ்தீப், தனிஷ், முமைத் கான் ஆகியோரோ இதுக்கும், தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
போதை
10 இளம் நடிகர்களுக்கு போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கம் உள்ளது என்று பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் கூட தெரிவித்துள்ளார்.
எப்படி?
தெலுங்கு திரையுலக பிரபலங்கள் போதைப் பொருள் விஷயத்தில் திடீர் என்று சிக்கியது எப்படி என்று தெரிய வந்துள்ளது. ரவி தேஜாவின் தம்பி பரத் ராஜ் அண்மையில் சாலை விபத்தில் பலியானார்.
பரத் ராஜ்
பரத் ராஜின் செல்போனில் போதைப் பொருள் கும்பலின் செல்போன் எண்கள் மற்றும் சில முக்கியத் தகவல்கள் இருந்துள்ளதை போலீசார் கண்டுபிடித்தனர். அதன் பிறகே பிற பிரபலங்கள் சிக்கியுள்ளனர். முன்னதாக பரத் போதைப் பொருள் வைத்திருந்த வழக்கில் கைதானார் என்பது குறிப்பிடத்தக்கது.