Don't Miss!
- News ‛‛வேஸ்ட் செய்யாத’’.. நமக்கு ஓட்டு போடுறவங்களுக்கு மட்டும் பணம் கொடு.. அதிமுக வேட்பாளரால் சர்ச்சை
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Sports சின்னவனை மீண்டும் சேர்க்காத டெல்லி.. குட்டி சச்சினுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி கொடுத்த ரிஷப் பண்ட்!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
போதைப் பொருள் வழக்கில் நடிகர், நடிகைகள் திடீர் என சிக்கியது எப்படி தெரியுமா?
ஹைதராபாத்: நடிகர் ரவி தேஜாவின் தம்பி பரத் சாலை விபத்தில் பலியானது குறித்த விசாரணையின்போது தான் போதைப் பொருள் கும்பல் சிக்கியதாம்.
போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஹைதராபாத்தில் நாசா என்ஜினியர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் போதைப் பொருள் பயன்படுத்தும் தெலுங்கு திரையுலகை சேர்ந்த 15 பேருக்கு போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
நடிகர்கள் ரவி தேஜா, நவ்தீப், தனிஷ், நடிகைகள் சார்மி, முமைத் கான் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நடிகர்கள்
போதைப் பொருள் வழக்கில் சிக்கியுள்ள நவ்தீப், தனிஷ், முமைத் கான் ஆகியோரோ இதுக்கும், தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
போதை
10 இளம் நடிகர்களுக்கு போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கம் உள்ளது என்று பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் கூட தெரிவித்துள்ளார்.
எப்படி?
தெலுங்கு திரையுலக பிரபலங்கள் போதைப் பொருள் விஷயத்தில் திடீர் என்று சிக்கியது எப்படி என்று தெரிய வந்துள்ளது. ரவி தேஜாவின் தம்பி பரத் ராஜ் அண்மையில் சாலை விபத்தில் பலியானார்.
பரத் ராஜ்
பரத் ராஜின் செல்போனில் போதைப் பொருள் கும்பலின் செல்போன் எண்கள் மற்றும் சில முக்கியத் தகவல்கள் இருந்துள்ளதை போலீசார் கண்டுபிடித்தனர். அதன் பிறகே பிற பிரபலங்கள் சிக்கியுள்ளனர். முன்னதாக பரத் போதைப் பொருள் வைத்திருந்த வழக்கில் கைதானார் என்பது குறிப்பிடத்தக்கது.