Don't Miss!
- News வின்னர் யாரு? ரிப்போர்ட் அனுப்புங்க.. வாக்குச்சாவடி ரீதியாக திமுக, அதிமுக திக் சர்வே! எகிறிய பதற்றம்
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அம்மாவுக்கு தாயாக மாறிய மகன்! நடிகையின் உருக்கமான போஸ்ட்!
மும்பை: நடிகை சோனாலி பெந்த்ரேவின் மகன் ஒரு குழந்தை போல் அவரை பார்த்துக்கொள்வதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்
பல்வேறு இந்தி திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்று, பிறகு தமிழ்ப்படங்களிலும் நடித்தவர் நடிகை சோனாலி பெந்த்ரே.
பம்பாய் திரைப்படத்தில் வரும் ஹம்மா ஹம்மா பாடலை ரகுமானுக்காக பாடியவர்களை விட சோனாலி பெந்த்ரேவுக்காக பாடியவர்கள் அதிகம். ஒரே பாடலில் இடம்பெற்றிருந்தாலும், அவரின் மேக்னட் லுக் மெய்சிலிர்க்க வைத்திருக்கும்.
கதிர் இயக்கிய காதலர் தினம் திரைப்படத்தில் ராஜா மட்டும் காதலிக்கவில்லை அந்த ரோஜாவை. அன்று வாலிப வயதில் இருந்த இளைஞர்கள் அனைவருமே ரோஜா ரோஜா என ஏங்கத் துவங்கினர்.
என்னவிலை அழகே என குணால் பாடும்போது சோனாலி பெந்த்ரேவை மனதில் வைத்தே வாலி எழுதியிருக்கிறார் என்பது தெரியும். நாசரின் மகள், குணாலின் காதலி என அனைத்து இடங்களிலும் சிறப்பாக நடித்திருப்பார் சோனாலி.
காதலர் தினம் திரைப்படத்திற்கு பிறகு பிரபு சாலமன் இயக்கிய கண்ணோடு காண்பதெல்லாம் திரைப்படத்தில் நடித்தார். யார் கண் பட்டதோ அதற்குப் பிறகு தமிழ்நாட்டுப் பக்கம் திரும்பிப் பார்க்கவில்லை.
43 வயதாகும் சோனாலி பெந்த்ரே இப்போது புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார். தான் புற்றுநோயால் அவதிப்பட்டு வருவதை தன்னுடைய மகன் ரன்வீரிடம் கனத்த இதயத்தோடு தெரிவித்ததாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
12 வயது ஆகும் மகனிடம் தனக்கு கேன்சர் என்று சொல்லும்போது மிக சாதுர்யமாக சோனாலியை கையாண்டதாகவும், இப்போது ரன்வீர் தான் தன்னை ஒரு குழந்தை போல பார்த்துக் கொள்கிறான் என்றும் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இதைப் பார்த்த ரசிகர்கள் சீக்கிரம் குணமாக பிரார்த்திப்பதாக கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.