Don't Miss!
- News பெண் துணை தாசில்தார் அளித்த புகார்.. மத்திய இணையமைச்சர் எல் முருகன் மீது அதிரடி வழக்கு! புது சிக்கல்
- Finance தங்கம் விலை ஓரே நாளில் 1400 ரூபாய் உயர்வு.. முதல் முறையாக ரூ.51000 தொட என்ன காரணம்..?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Automobiles பைக் வாங்கும்போது நம்ம பசங்க தப்பு பண்றது இதில்தான்!! கேடிஎம் பைக்கின் விலையில் கிடைக்கும் 6 பவர்ஃபுல் பைக்ஸ்!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
அம்மாவுக்கு தாயாக மாறிய மகன்! நடிகையின் உருக்கமான போஸ்ட்!
மும்பை: நடிகை சோனாலி பெந்த்ரேவின் மகன் ஒரு குழந்தை போல் அவரை பார்த்துக்கொள்வதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்
பல்வேறு இந்தி திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்று, பிறகு தமிழ்ப்படங்களிலும் நடித்தவர் நடிகை சோனாலி பெந்த்ரே.
பம்பாய் திரைப்படத்தில் வரும் ஹம்மா ஹம்மா பாடலை ரகுமானுக்காக பாடியவர்களை விட சோனாலி பெந்த்ரேவுக்காக பாடியவர்கள் அதிகம். ஒரே பாடலில் இடம்பெற்றிருந்தாலும், அவரின் மேக்னட் லுக் மெய்சிலிர்க்க வைத்திருக்கும்.
கதிர் இயக்கிய காதலர் தினம் திரைப்படத்தில் ராஜா மட்டும் காதலிக்கவில்லை அந்த ரோஜாவை. அன்று வாலிப வயதில் இருந்த இளைஞர்கள் அனைவருமே ரோஜா ரோஜா என ஏங்கத் துவங்கினர்.
என்னவிலை அழகே என குணால் பாடும்போது சோனாலி பெந்த்ரேவை மனதில் வைத்தே வாலி எழுதியிருக்கிறார் என்பது தெரியும். நாசரின் மகள், குணாலின் காதலி என அனைத்து இடங்களிலும் சிறப்பாக நடித்திருப்பார் சோனாலி.
காதலர் தினம் திரைப்படத்திற்கு பிறகு பிரபு சாலமன் இயக்கிய கண்ணோடு காண்பதெல்லாம் திரைப்படத்தில் நடித்தார். யார் கண் பட்டதோ அதற்குப் பிறகு தமிழ்நாட்டுப் பக்கம் திரும்பிப் பார்க்கவில்லை.
43 வயதாகும் சோனாலி பெந்த்ரே இப்போது புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார். தான் புற்றுநோயால் அவதிப்பட்டு வருவதை தன்னுடைய மகன் ரன்வீரிடம் கனத்த இதயத்தோடு தெரிவித்ததாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
12 வயது ஆகும் மகனிடம் தனக்கு கேன்சர் என்று சொல்லும்போது மிக சாதுர்யமாக சோனாலியை கையாண்டதாகவும், இப்போது ரன்வீர் தான் தன்னை ஒரு குழந்தை போல பார்த்துக் கொள்கிறான் என்றும் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இதைப் பார்த்த ரசிகர்கள் சீக்கிரம் குணமாக பிரார்த்திப்பதாக கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.
-
Aadujeevitham Review: ஆடு ஜீவிதம் விமர்சனம்.. பாலைவனத்தில் அடிமை வாழ்க்கை.. கண்ணெல்லாம் கலங்குது!
-
சீதனமாக சொகுசு கார்.. ரோபோ சங்கர் மனசே மனசு.. இந்திரஜாவின் திருமண பரிசு இவ்ளோ காஸ்ட்லியா?
-
தமிழில் வியாபாரமே ஆகாத கேம் சேஞ்சர் ‘ஜரகண்டி’.. ஷங்கர் படத்துக்கே இந்த கதியா?.. தெலுங்கில் எப்படி?