Don't Miss!
- Automobiles தயவு செஞ்சு துபாய் பக்கம் வராதீங்க!விமான பயணிகளுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை!
- Lifestyle உங்க வாழ்க்கையில் நீங்க எத அதிகமா விரும்புறீங்கன்னு தெரிஞ்சுக்கணுமா? அப்ப இதுல என்ன தெரியுது சொல்லுங்க..
- News மக்களை ஒருமையில் பேசிய தேர்தல் அதிகாரி.. அதிரடி காட்டிய நெல்லை கலெக்டர்..வெளியே தள்ளிய போலீஸ்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Sports IPL 2024 : ருதுராஜ் செய்த தவறு.. தவித்துப் போன சிஎஸ்கே.. LSG vs CSK போட்டியில் என்ன நடந்தது?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
அம்மாவுக்கு தாயாக மாறிய மகன்! நடிகையின் உருக்கமான போஸ்ட்!
மும்பை: நடிகை சோனாலி பெந்த்ரேவின் மகன் ஒரு குழந்தை போல் அவரை பார்த்துக்கொள்வதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்
பல்வேறு இந்தி திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்று, பிறகு தமிழ்ப்படங்களிலும் நடித்தவர் நடிகை சோனாலி பெந்த்ரே.
பம்பாய் திரைப்படத்தில் வரும் ஹம்மா ஹம்மா பாடலை ரகுமானுக்காக பாடியவர்களை விட சோனாலி பெந்த்ரேவுக்காக பாடியவர்கள் அதிகம். ஒரே பாடலில் இடம்பெற்றிருந்தாலும், அவரின் மேக்னட் லுக் மெய்சிலிர்க்க வைத்திருக்கும்.
கதிர் இயக்கிய காதலர் தினம் திரைப்படத்தில் ராஜா மட்டும் காதலிக்கவில்லை அந்த ரோஜாவை. அன்று வாலிப வயதில் இருந்த இளைஞர்கள் அனைவருமே ரோஜா ரோஜா என ஏங்கத் துவங்கினர்.
என்னவிலை அழகே என குணால் பாடும்போது சோனாலி பெந்த்ரேவை மனதில் வைத்தே வாலி எழுதியிருக்கிறார் என்பது தெரியும். நாசரின் மகள், குணாலின் காதலி என அனைத்து இடங்களிலும் சிறப்பாக நடித்திருப்பார் சோனாலி.
காதலர் தினம் திரைப்படத்திற்கு பிறகு பிரபு சாலமன் இயக்கிய கண்ணோடு காண்பதெல்லாம் திரைப்படத்தில் நடித்தார். யார் கண் பட்டதோ அதற்குப் பிறகு தமிழ்நாட்டுப் பக்கம் திரும்பிப் பார்க்கவில்லை.
43 வயதாகும் சோனாலி பெந்த்ரே இப்போது புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறார். தான் புற்றுநோயால் அவதிப்பட்டு வருவதை தன்னுடைய மகன் ரன்வீரிடம் கனத்த இதயத்தோடு தெரிவித்ததாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
12 வயது ஆகும் மகனிடம் தனக்கு கேன்சர் என்று சொல்லும்போது மிக சாதுர்யமாக சோனாலியை கையாண்டதாகவும், இப்போது ரன்வீர் தான் தன்னை ஒரு குழந்தை போல பார்த்துக் கொள்கிறான் என்றும் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இதைப் பார்த்த ரசிகர்கள் சீக்கிரம் குணமாக பிரார்த்திப்பதாக கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.