Don't Miss!
- Sports IPL Classics - 2010 சீசன் அரையிறுதியில் CSK வென்றது எப்படி? பலம் வாய்ந்த டெக்கான் அணியுடம் மோதிய கதை
- News வேகும் வெயிலிலும்.. "வெறுப்புக்கு" ஓட்டு போடாதீர்கள் பதாகையுடன்.. தெரு தெருவாக சுற்றும் முதியவர்
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
நடிகை யாஷிகா ஆனந்த் தற்போது எப்படி உள்ளார்? நேரில் சந்தித்த பிக்பாஸ் பிரபலம்!
சென்னை: நடிகை யாஷிகா ஆனந்தை அவரது நெருங்கிய தோழியான ஐஸ்வர்யா தத்தா நேரில் சந்தித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் வளரும் இளம் நடிகையாக வலம் வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த்.
4 கல்யாணம் இல்ல.. 40 கல்யாணம் கூட பண்ணுவேன்.. சாமியார் ஆகமாட்டேன்.. பிரஸ் மீட்டில் ஆவேசமான வனிதா!
நேற்று முன்தினம் இரவு யாஷிகா ஆனந்த் புதுச்சேரியில் இருந்து காரில் சென்னை திரும்பிக் கொண்டிருந்தார்
தோழி பலி
சூளேரிக்காடு அருகே அவரது கார் வந்தபோது எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளாது. இதில் யாஷிகா ஆனந்த்தின் தோழி வள்ளி செட்டி பவானி காரில் இருந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இடுப்பில் எலும்பு முறிவு
பின் இருக்கையில் அமர்ந்திருந்த சையது, அமீர் ஆகிய இரண்டு நண்பர்கள் லேசான காயங்களுடன் தப்பினர். இதில் யாஷிகா படுகாயமடைந்தார். யாஷிகாவின் இடுப்பில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது,
அப்பல்லோ மருத்துவமனை
இதேபோல் கை மற்றும் காலிலும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. முதலில் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட யாஷிகா ஆனந்த் பின்னர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மது போதையில் இல்லை
யாஷிகா ஆனந்த் காரை வேகமாக ஓட்டிச்சென்றதே விபத்துக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் யாஷிகா ஆனந்த் மது போதையில் இல்லை என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஐஸ்வர்யா தத்தா சந்திப்பு
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் யாஷிகாவுக்கு நெருங்கிய தோழியான ஐஸ்வர்யா தத்தா, அவரை மருத்துவமனைக்கு சென்று நேரில் பார்த்துள்ளார். அவரது உடல் நிலை குறித்து குடும்பத்தினரிடமும் மருத்துவர்களிடமும் விசாரித்துள்ளார்.
Recommended Video
நலமாக இருக்கிறார்
இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா தத்தா, யாஷிகா ஆனந்த் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டிருப்பதாவது, என்னுடை ஃபிரண்ட் நலமாக இருக்கிறார். விரைவில் நலம்பெற்று விடுவார். அவருடைய மன உறுதி திடமாக உள்ளது என பதிவிட்டுள்ளார்.
3 பிரிவுகளில் வழக்கு
இதனைப பார்த்த நெட்டிசன்கள் அவர் விரைவில் நலம் பெற பிரார்த்தனைகள் என பதிவிட்டு வருகின்றனர். இதனிடையே அதிவேகமாக காரை ஓட்டியது. உயிர்சேதம் ஏற்படுத்தியது உள்ளிட்ட 3 பிரிவுகளில் நடிகை யாஷிகா ஆனந்த் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.