நான் ஜெயிச்சா என்னென்ன பண்ணுவேன் தெரியுமா.. ராக்கி சொல்வதைக் கேளுங்க!
மும்பை: நான் நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயித்தால், பெண்களுக்காக கராத்தே கிளாஸ்களை ஆரம்பிப்பேன். அவர்கள் தங்களைத் தாங்களே ஆண்களிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவேன் என்று நடிகை ராக்கி சாவந்த் கூறியுள்ளார்.
மும்பை வட மேற்குத் தொகுதியில் ராக்கி போட்டியிடப் போகிறார். சுயேச்சை வேட்பாளராக இவர் களம் இறங்குகிறார்.
இந்த நிலையில் தான் ஜெயித்தால் எப்படியெல்லாம் செயல்படுவேன் என்பது குறித்து சின்னதாக விளக்கியுள்ளார் ராக்கி.
ராக்கி சொல்வதைக் கேளுங்க...

எனக்கு அரசியல் தெரியாதுங்க
எனக்கு எப்படி அரசியல் செய்ய வேண்டும் என்பதே தெரியாது. மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்கத்தான் நான் ஆசைப்படுகிறேன்.

நாலு பேருக்கு நல்லது செய்தால்
நாலு பேருக்கு நம்மால் முடிந்த நல்லதைச் செய்ய வேண்டும். அதுதான் எனது லட்சியமும் கூட.

மக்கள் சொல்லித்தான் பாஸ்
மக்கள்தான் நான் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று விரும்பினர். எனவேதான் நான் அரசியலுக்கு வந்துள்ளேன்.

நிறைய சமூக சேவை செய்துள்ளேனே
நான் கடந்த 7 வருடமாகவே சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறேன்.

பெண்களின் பாதுகாப்பு முக்கியம்
பெண்களின் பாதுகாப்புதான் எனது முக்கிய இலக்கு.

மும்பை டெல்லியாகக் கூடாது
டெல்லி போல பாதுகாப்பற்ற நகரமாக மும்பை மாறுவதை நான் விரும்பவில்லை. அது கூடாது.

கராத்தே கிளாஸ்
பெண்களுக்கான சுய பாதுகாப்புமுறைகளை நான் கற்றுத் தரப் போகிறேன். கராத்தே கிளாஸ்களுக்கு ஏற்பாடு செய்வேன். இதன் மூலம் ஆண்களிடமிருந்து தங்களைப் பெண்களால் காத்துக் கொள்ள முடியும் என்றார் ராக்கி.


Click it and Unblock the Notifications