Don't Miss!
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
- News பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியல் அமைப்பை மாற்றிடுமா? வந்து விழுந்த கேள்வி.. அமித்ஷா சொன்ன பதில்
- Technology மிரளுது டிஸ்கவுண்ட்.. முழுசா ரூ.12000 கட்.. அடிமட்ட ரேட்டில் ஃபிளிப் போன்.. 3D கர்வ்ட் டிசைன்.. எந்த மாடல்?
- Automobiles வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
நான் மனைவியை பிரிய நடிகை கங்கனா காரணமா?: வாரிசு நடிகர் விளக்கம்
மும்பை: தானும், சூசனும் விவாகரத்து பெற நடிகை கங்கனா காரணமா என்பது குறித்து பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் விளக்கம் அளித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் 7 ஆண்டுகளாக தன்னுடன் தொடர்பு வைத்திருந்ததாக நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். ஆனால் இதை ரித்திக் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இருவருக்கும் இடையேயான சண்டை தற்போது மீண்டும் சூடுபிடித்துள்ளது.
குற்றச்சாட்டு
கங்கனாவின் குற்றச்சாட்டு அபத்தமானது. இரண்டு பிரபலங்கள் 7 ஆண்டுகளாக தொடர்பு வைத்திருந்தால் அது மீடியாவுக்கு தெரியாமலா போய்விடும் என்று கேட்டுள்ளார் ரித்திக்.
தொடர்பு
ரித்திக் ரோஷன் கங்கனாவுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததை அவரின் மனைவி சூசன் கண்டுபிடித்ததால் தான் விவாகரத்து வாங்கி சென்றுவிட்டார் என்று கூறப்பட்டது. இதை ரித்திக் மறுத்துள்ளார்.
விவாகரத்து
நானும், சூசனும் பிரிய கங்கனா காரணம் இல்லை. ஒரு தம்பதி பிரிந்தால் கள்ளத்தொடர்பு தான் காரணமாக இருக்க வேண்டுமா? நானும், சூசனும் தற்போதும் நல்ல நண்பர்களாக உள்ளோம் என்று ரித்திக் தெரிவித்துள்ளார்.
விருப்பம் இல்லை
நாங்கள் விவாகரத்து பெற்றதற்கான காரணம் எனக்கும், சூசனுக்கும் தெரியும். அதை வெளியே சொல்ல விரும்பவில்லை. அதே போன்று கங்கனா விவகாரம் பற்றி இனி பேச விரும்பவில்லை என்று ரித்திக் கூறியுள்ளார்.