Don't Miss!
- Lifestyle இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கனுமா?.. இதை சாப்பிடுங்கள்..!
- Finance புது ATM கார்டு ரூல்ஸ்.. இனி ஆன்லைன் மோசடிக்கு வாய்ப்பே இல்ல!
- Automobiles இவ்ளோ அழகா பிக்-அப் டிரக்கா! குடும்பத்தோட மட்டுமல்ல வீட்டையே காலி பண்ணிட்டு போகலாம்.. நிறைய வழிகளில் யூஸ் பண்ண
- News அமெரிக்காவின் வீழ்ச்சி ஆரம்பம்.. டாலருக்கு கூட்டாக ஆப்பு வைத்த சீனா - ரஷ்யா.. உலக அரசியலே ஆடுதே!
- Technology WhatsApp-க்கு இன்டர்நெட் வேண்டாம்.. ஆஃப்லைனில் போட்டோ, வீடியோ ஷேரிங்.. புதிய பீச்சர் வருது.. பர்மிஷன் போதும்!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இஸ்தான்புல் தாக்குதல்: உயிர்தப்பிய பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன்
மும்பை: துருக்கி தலைநகர் இஸ்தான்புல் விமானநிலையத்தில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் இருந்து பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் உயிர் தப்பியுள்ளார். தனக்கு உதவிய நல்ல உள்ளங்கள், விமானப்படை ஊழியர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
நடிகர் ஹிருத்திக் ரோஷன் தன் மகன்களுடன் துருக்கிக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டிருந்தார். இன்று நாடு திரும்புவதற்காக இஸ்தான்புல் விமான நிலையத்திற்கு அவர் வந்திருந்தார். அவர் பயணம் செய்யவிருந்த விமானத்தைத் தவறவிட்ட நிலையில் அடுத்த விமானத்திற்காக காத்திருந்தார். மறுநாள்தான் விமான பயணம் என்று முடிவு செய்திருந்த நிலையில் திடீரென வேறு விமானத்தில் அவர்கள் நாடு திரும்பினர்.
missed connecting flight at Istanbul n wer stuck at airport next flight ws next day,but took economy n flew out earlier. #Prayers4istanbul
— Hrithik Roshan (@iHrithik) June 28, 2016
ஹிருத்திக் ரோசன் விமானம் ஏறிய சில மணிநேரங்களிலேயே இஸ்தான்புல் விமான நிலையத்தில் தற்கொலைப்படையினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 36 அப்பாவி மக்கள் பலியாகினர்.
Ws helped by d kindest staff at Istanbul arport hours ago. Shocking news. Innocents killed 4 religion.V must stand united against terrorism.
— Hrithik Roshan (@iHrithik) June 29, 2016
நாடு திரும்பியதும் தனக்கு உதவி செய்த இஸ்தான்புல் விமான நிலையப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், இஸ்தான்புல் தாக்குதலில் இறந்தவர்கள்களுக்கு இரங்கல் தெரிவித்ததுடன், தீவிரவாதத்திற்கு எதிராக ஒருமித்த குரலில் போராட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.