Don't Miss!
- Finance இனி சுங்கச் சாவடிகளில் நிற்க வேண்டியதில்லை! வருகிறது ஜிபிஎஸ் தொழில்நுட்பம்..!
- Automobiles கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- Sports வீடியோ- கட்டி பிடிக்க வந்த மலிங்கா.. தள்ளி விட்ட ஹர்திக் பாண்டியா..மும்பை அணியில் என்ன தான் நடக்குது
- News "மத்திய அரசை விமர்சிக்காதது ஏன்?" இரண்டு நொடி கேப் விட்டு.. எடப்பாடி பழனிசாமி தந்த விளக்கம்
- Technology ஏர்டெல் காலி.. மாதாந்திரம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. 5ஜி டேட்டா.. அன்லிமிட் வாய்ஸ் கால்கள்!
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
சுஷாந்த் கணக்கிலிருந்து பெரிய தொகை ரியா சக்ரபர்த்திக்கு அனுப்பப்பட்டுள்ளது.. உறவினர் பகீர் தகவல்!
சென்னை: நடிகர் சுஷாந்த் சிங் வங்கி கணக்கில் இருந்து ரியா சக்ரபர்த்தியின் வங்கி கணக்குக்கு ஒரு பெரிய தொகை அனுப்பப்பட்டுள்ளதாக சுஷாந்தின் கஸினான நீரஜ் குமார் சிங் தெரிவித்துள்ளார்.
Recommended Video
பிரபல பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த மாதம் 14ஆம் தேதி மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவரது மரணம் நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சுஷாந்தின் மரணத்திற்கு பாலிவுட்டில் உள்ள கேங் அரசியலே காரணம் கூறப்பட்டது.
விஸ்வரூபம் எடுத்த சுஷாந்த் சிங் மரணம்.. ரியா சக்கரபோர்த்தி மீது வழக்கு தொடுத்த சுஷாந்த்தின் தந்தை
விசாரணை
சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுஷாந்தின் குடும்பத்தினர், சுஷாந்துக்கு சிகிச்சையளித்த மருத்துவர், அவரது காதலி ரியா சக்ரபர்த்தி உள்ளிட்ட பலரிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டது.
ரியா மீது புகார்
இந்நிலையில் பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளர்களான கரன் ஜோகர் மற்றும் மகேஷ் பட் ஆகியோரிடம் நேற்று போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் அளித்த தகவல்களை பதிவு செய்து கொண்டனர். இதனை இந்த வழக்கின் அதிரடி திருப்பமாக சுஷாந்தின் தந்தை, சுஷாந்தின் காதலியான ரியா சக்ரபர்த்தி மீது போலீஸில் புகார் அளித்தார்.
பொருளாதார நெருக்கடி
அதில், ரியா சக்ரபர்த்தி, 15 கோடி ரூபாய் பணத்தை சுஷாந்தை ஏமாற்றி, வேறு ஒரு அக்கவுண்ட்டுக்கு மாற்றியுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும் ரியாவும் இன்னும் சிலரும் சேர்ந்து பொருளாதார ரீதியாகவும் மன ரீதியாகவும் பெரும் அழுத்தத்தை கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
சுஷாந்தின் உறவினர்
இதனால் சுஷாந்த் மரண வழக்கு சூடுபிடித்துள்ள நிலையில் சுஷாந்தின் உறவினரும் பல பகீர் புகார்களை கூறியுள்ளார். அதாவது மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் உறவினரும், பாஜக எம்எல்ஏவுமான நீரஜ் குமார் சிங் பப்லு, சுஷாந்த் கணக்கிலிருந்து நடிகை ரியா சக்ரபர்த்தியின் கணக்குக்கு ஒரு பெரிய தொகை மாற்றப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
மோசடி செய்யப்பட்டுள்ளது
நடிகை ரியா சக்ரபர்த்தி, சுஷாந்த் சிங் ராஜ்புத் ஆகிய இருவருக்கும் சில நிறுவனங்களுக்கு கூட்டுக் கணக்குகள் உள்ளன, இதன் மூலம் ரியா சக்ரபர்த்தியின் தரப்பிலிருந்து மோசடி செய்யப்பட்டுள்ளது என்று எஃப்ஐஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் பப்லு கூறியுள்ளார். மேலும் கூறுகையில், இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி அனைத்தையும் வெளியே கொண்டு வருவார்கள் என்றும் கூறியுள்ளார்.