Don't Miss!
- Automobiles பெட்டிகடை வச்சிருக்கிறவன் கூட கணக்கு வச்சிருப்பான்! ஆனா இந்திய ரயில்வே நிர்வாகத்திடம் இந்த கணக்கு இல்லையாம்!
- News இனி ஈசியா லோயர் பெர்த் கிடைக்கும்.. நாமலே சீட்டை செலக்ட் பண்ணிக்கலாம்! ரயில்களில் வரும் சூப்பர் வசதி
- Lifestyle கண்களில் இந்த அறிகுறி தெரிஞ்சா அசால்ட்டா இருக்காதீங்க.. உங்களுக்கு கண் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு...
- Finance மிரட்டும் குஜராத், அசராத வளர்ச்சியில் தமிழ்நாடு..!
- Technology சாதா ஹெல்மெட் தூக்கி போடுவாங்க.. வந்தாச்சு ஏசி ஹெல்மெட்.. சில்லுனு காத்து.. இனி வெயிலை சமாளிக்க முடியும்..
- Sports தோனியை சமாதானப்படுத்த முடியாது.. அந்த விஷயத்திற்கு ரிஷப் பண்ட் தான் சரி.. ரோகித் சர்மா கலகல!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
விபச்சார வழக்கில் கைதான நடிகை ஸ்வேதாவை காப்பகத்தில் இருந்து விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு!
ஹைதராபாத்: விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்டு மகளிர் காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த நடிகை ஸ்வேதா பாசுவை விடுதலை செய்ய ஹைதராபாத் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஹைதராபாத்திலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் விபச்சாரம் செய்தபோது கையும் களவுமாக கைதானவர் சுவேதா பாசு. தேசிய விருது பெற்ற 23 வயது நடிகையான சுவேதா பாசு, தமிழில் கருணாசுக்கு ஜோடியாக சந்தாமாமா திரைப்படத்திலும் நடித்தவர். எனவே தேசிய அளவில் இந்த கைது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், ஸ்வேதா பாசுவை, மகளிர் காப்பகத்தில் அடைத்து வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, அவர் வெளியுலக தொடர்பு ஏதுமின்றி தொடர்ந்து காப்பகத்தில் இருந்தார்.
இந்நிலையில் இன்று இவ்வழக்கு விசாரணை ஹைதராபாத், நாம்பல்லே கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் தரப்பு கருத்தை கேட்ட நீதிமன்றம், ஸ்வேதா பாசுவை உடனடியாக காப்பகத்தில் இருந்து ரிலீஸ் செய்ய உத்தரவிட்டுள்ளது. இன்று இரவே அவர் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.